News April 9, 2025

பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

image

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News January 11, 2026

தி.மலை: புதிய டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

திருவண்ணாமலையில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு இங்கு <>க்ளிக் <<>>செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News January 11, 2026

தி.மலை: டூவீலர், கார் ஓட்ட தெரிந்தவரா நீங்கள்?

image

தி.மலையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். <>DigiLocker,<<>> M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News January 11, 2026

BIG NEWS: தி.மலைக்கு இன்று கனமழை எச்சரிக்கை!

image

வங்கக்கடலில் உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உங்கள் பகுதியில் தற்போது மழை பெய்கிறதா என கமெண்டில் சொல்லுங்க.

error: Content is protected !!