News April 9, 2025
பிளஸ்-2 மாணவன் உள்பட 2 பேர் மின்சாரம் தாக்கி பலி

திருவண்ணாமலை அண்ணாநகர் 5-வது தெருவை சேர்ந்த லோகேஷ் (16), திருநகரை சேர்ந்த தனுஷ்குமார் (18) ஆகியோர் தனது நண்பரின் பிறந்தநாளுக்காக வாழ்த்து பேனர் ஒட்டினர். அப்போது மின்கம்பியில் ஒட்டி இருந்த இரும்புசாரம் மூலம் மின்சாரம் அவர்கள் மீது பாய்ந்ததில் இருவரும் உயிரிழந்தனர். போலீசார் உடல்களை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இது அந்த பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News January 3, 2026
தி.மலை: 12th போதும், ஆதாரில் வேலை!

தி.மலை மக்களே ஆதார் துறையில் சூப்பர்வைசர், ஆபரேட்டர் பணிகளுக்கு 282 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 18 வயது நிரம்பிய 12வது படித்தவர்கள் ஜன.31க்குள் விண்ணப்பிக்க வேண்டும். மாதச் சம்பளம் ரூ.20,000 வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கு <
News January 3, 2026
தி.மலையில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

ஓசூர், சூளகிரியை சேர்ந்தவர் தினேஷ் (19) தி.மலையில் ஒரு டீ கடையில் வேலை செய்து வருகிறார். காந்தி நகரில் வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளார். இந்நிலையில், ஊத்தங்கரையை சேர்ந்த பெண்ணுக்கும் இவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட, நேற்று தினேஷ் காந்தி நகரில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
News January 3, 2026
தி.மலை: கூலித் தொழிலாளி மயங்கி விழுந்து பலி!

சென்னையை சேர்ந்த எலெக்ட்ரீஷியன் முத்து (51) இவர் தி.மலையில் எலெக்ட்ரீஷியன் வேலை செய்து வந்தார். குடும்பத் தகராறு காரணமாக இவர் மனைவி இவரை பிரிந்து சென்றுள்ளார். இந்த நிலையில், இவர் தனது நண்பர் ஊரான செய்யாறு வட்டம் கீழ்நீர்குன்றம் கிராமத்தில் கூலி வேலைகளை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் விவசாய நிலத்தில் வேலை செய்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


