News March 3, 2025

பிளஸ் 2 தேர்வு எழுதிய 35,294 மாணவ, மாணவிகள்

image

கோவை மாவட்டத்தில் இன்று 128 மையங்களில் நடைபெறும் +2 தேர்வை 35,294 பேர் எழுதுகிறார்கள். பொதுத்தேர்வை 363 பள்ளிகளைச் சேர்ந்த 16,353 மாணவர்கள்,18,941 மாணவிகள் என மொத்தம் 35,294 பேர் எழுதுகின்றனர். இது தவிர 649 தனித் தேர்வர்கள் எழுதுகின்றனர். 7 இடங்களில் வினாத்தாள் கட்டு காப்பு மையங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை கண்காணிக்க 264 பறக்கும்படையினர், 2150 அறை கண்காணிப்பாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Similar News

News December 1, 2025

கோவை: +2 போதும் ரயில்வேயில் சூப்பர் வேலை!

image

கோவை மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க், ரயில் கிளார்க், எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.04 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News December 1, 2025

கோவை: செருப்படி ஓடை பற்றி தெரியுமா?

image

கோவை மேற்கு தொடர்ச்சிமலையில் உருவாகி ராமநாதபுரம் வழியாக நொய்யல் ஆற்றில் கலக்கும் சங்கனூர் ஓடையே, முன்பு ஒரு காலத்தில் செருப்படி ஓடை என அழைக்கப்பட்டது. முன்பு இந்த ஓடையில் கொள்ளையர்கள் இருந்தார்களாம். அவர்கள் இந்த ஓடை வழியாக செல்லும் வண்டிகள், மணலில் சிக்கிக்கொள்ளும்போது, செருப்பால் மக்களை தாக்கி, அவர்களிடம் உள்ள நகை, பணத்தை பரித்து செல்வார்களாம். இதனால் இந்த ஓடைக்கு செருப்படி ஓடை என பெயர் வந்தது.

News December 1, 2025

கோவை: மனைவியை கொன்று What’s App-ல் ஸ்டேட்டஸ்!

image

நெல்லையை சேர்ந்த பாலமுருகன் கோவையில் தனியார் தங்கும் விடுதியில் இருந்த மனைவி ஸ்ரீபிரியாவை நேற்று தனியார் விடுதியில் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். அங்கிருந்த நாற்காலியில் கால் போட்டு அமர்ந்து செல்பி எடுத்து அதனை தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் துரோகத்தின் சம்பளம் மரணம் என வைத்துள்ளார். போலீஸ் வரும் வரை அங்கேயே இருந்தவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!