News March 4, 2025
பிளஸ் 2 தேர்வில் 206 பேர் ‘ஆப்சென்ட்’

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Similar News
News December 10, 2025
தேனி: வெந்நீரில் தவறி விழுந்து குழந்தை பலி!

கம்பம் தாத்தப்பன்குளத்தை சேர்ந்த தம்பதி ராஜேஷ்கண்ணன்- கீர்த்திகா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். டிச.1 அன்று கீர்த்திகா, வெந்நீர் வைத்து விட்டு துணி எடுக்க சென்றபோது அங்கு 2வது மகள் பிரணிவிகா ஸ்ரீ வெந்நீரில் தவறி விழுந்தார். பலத்த காயமடைந்த குழந்தை சிகிச்சைக்காக மதுரை GH-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு.
News December 10, 2025
தேனி: SBI வங்கியில் வேலை.. தேர்வு இல்லை! APPLY

தேனி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் <
News December 10, 2025
தேனி: மாணவர்களுக்கு கல்வி கடன்; மிஸ் பண்ணிடாதீங்க.!

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்விக்கடன் முகாம் (Education Loan Camp) வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இன்று (டிச.10) நடைபெற உள்ளது. எனவே, உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை தவறாது பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


