News March 4, 2025
பிளஸ் 2 தேர்வில் 206 பேர் ‘ஆப்சென்ட்’

தேனி: மாவட்டத்தில் 54 தேர்வு மையங்களில் நடந்த பிளஸ் 2 தமிழ்தேர்வில் 13,020 மாணவர்கள் பங்கேற்றனர். 206 பேர் தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் ஆகினர்.மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 141 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 6,271, மாணவிகள் 6,792 பேர் என மொத்தம் 13,063 பேர், தனித்தேர்வர்கள் 163 பேர் என மொத்தம் 13,226 பேர் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
Similar News
News December 16, 2025
தேனி: டிகிரி போதும்…ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை ரெடி!

தேனி மக்களே, Bank of Barodaவின் துணை வங்கியில் (Nainital Bank Limited) பல்வேறு பணிகளுக்கு 185 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரம்பிய ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் 01.01.2026க்குள் இங்கு<
News December 16, 2025
தேனியில் தோட்ட வேலைக்கு சென்றவர் உயிரிழப்பு!

போடி, ஆதிப்பட்டி பகுதியை சோ்ந்தவர் வேலாண்டி. இவா் முத்துக்கோம்பை பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை பாா்த்து வந்தார். மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சில தினங்களுக்கு முன் ஆதிப்பட்டிக்கு வந்துவிட்டு தோட்டத்துக்கு செல்வதாகக் கூறி சென்ற நிலையில் அணைக்கரைப்பட்டியிலிருந்து முத்துக்கோம்பைக்கு செல்லும் பாதையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News December 16, 2025
தேனியில் நாளை இங்கெல்லாம் மின்தடை!

தேனி துணை மின் நிலையத்தில் நாளை (டிச.17) புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் தேனி, அல்லிநகரம், பழனிசெட்டிபட்டி, கோடாங்கிபட்டி, முத்துதேவன்பட்டி, அரண்மனைப்புதூர், பூதிப்புரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகா தெரிவித்துள்ளார். SHARE IT


