News April 3, 2025

பிலால் ஹோட்டல் விவகாரம் – இதுவரை 55 பேர் பாதிப்பு

image

சென்னை திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள பிலால் ஹோட்டலில் உணவு சாப்பிட்டதால் இதுவரை 55 பேரின் உடல்நலம் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடை உரிமையாளரின் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் 55 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

Similar News

News November 13, 2025

சென்னையில் ஒரு ரூபாய் டிக்கெட்!

image

சென்னை ஒன் செயலி மூலம், ₹1 சிறப்பு தள்ளுபடி விலையில் டிக்கெட்டுகளைப் பெறலாம். ₹1 டிக்கெட் எடுத்து பேருந்துகள், மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் பயணிக்கலாம். BHIM Payments App அல்லது Navi UPI ஐப் பயன்படுத்தி Chennai One செயலி மூலம் டிக்கெட் பெறுபவர்களுக்கு, டிக்கெட்டின் விலை ₹1. இந்த “One Rupee Ticket” சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க!

News November 13, 2025

8 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நாணய மோசடி

image

சென்னை நெசப்பாக்கத்தில் தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாகக் கூறி ரு.8 கோடி மோசடி செய்த சத்தியசீலன் – சித்ரா தம்பதியினர் நேற்று கைது செய்யப்படனர். “தீபாவளி நிதி திட்டம்” என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் வசூலித்து, தங்க நாணயங்கள் வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய தம்பதியினர் கைது செய்யப்பட்டனர். போலியான பண்டு சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என போலீசார் மக்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

News November 13, 2025

தேவநாதன் யாதவை கைது செய்ய நீதிமன்ற உத்தரவு

image

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றாததால் தேவநாதன் யாதவை உடனடியாக கைது செய்ய சென்னை முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ரூ.100 கோடி வைப்புத் தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்கு இணங்காததால், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

error: Content is protected !!