News August 14, 2024
பிரெஞ்சு நாடுகளின் பாராளுமன்ற கூட்டமைப்பில் புதுச்சேரி

புதுச்சேரி சட்டப்பேரவை பிரெஞ்சு நாடுகளின் பாராளுமன்ற கூட்டமைப்பில் சேர்ந்துள்ளது. இதனை சட்டப்பேரவை தலைவர் அவர்கள் இன்று சட்டப்பேரவையில் அறிவித்தார். பிரெஞ்சு மொழி பேசும் 56 நாடுகளில் பாராளுமன்றங்கள் இந்த அமைப்பில் உள்ளன. பிரெஞ்சு மொழி பேசும் நாடுகள் நமது புதுச்சேரி நட்புறவை பேணிக்காக்கவும்,கல்வி, சுற்றுலா, கலாச்சார பரிவர்த்தனைகளுக்கு மிகவும் உபயோகமாக இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
புதுச்சேரி: சாலை மறியலில் ஈடுபட்ட எம்எல்ஏ கைது

மத்திய அரசின் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் மீது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவதூறு பரப்பி வருவதாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில், செல்லிப்பட்டு பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். செல்லிப்பட்டு சாலை சந்திப்பில் 100க்கும் மேற்பட்ட எம்எல்ஏ ஆதரவாளர்கள், பொதுமக்கள் போராட்டம் செய்ததை தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் உட்பட அனைவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
News November 28, 2025
புதுச்சேரியை புரட்டி போட போகும் புயல்

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி வருகிறது. இது புதுச்சேரியை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் புதுச்சேரியில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News November 28, 2025
புதுச்சேரி: குடிநீர் தடை அறிவிப்பு!

புதுச்சேரி, பொதுசுகாதார செயற்பொறியாளர் வெளியிட்ட செய்தியில், தனகோடி நகர் மற்றும் தர்மாபுரி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் நாளை 29ம் தேதியும், குருமாம்பேட் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில், வரும் 1ம் தேதியும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் நாளை தனகோடி நகர், தர்மாபரி, லெனின் வீதி, சபரி நகர், பகுதிகளிலும், வரும் 1ம் தேதி குருமாம்பேட் பகுதியிலும் குடிநீர் தடைபடும் தெரிவித்தாரர்.


