News January 24, 2025
பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News January 2, 2026
பெரம்பலூர் பெயர் காரணம் தெரியுமா?

இந்த ஊரில் பிரம்பு மரங்கள் அதிகமாக விளைந்ததாலும், அதிலிருந்து பல பொருள்கள் இந்த ஊர் மக்கள் தயாரித்து வந்ததாலும், இந்த ஊருக்கு பிரம்பலூர் என்ற பெயர் வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் பெரம்பலூர் என மாறியதாக கூறப்படுகிறது. மேலும் பெரும்பல்லூர் என்னும் பெயரே பெரம்பலூர் என மாறியதாகவும் பெரியோர்கள் கூறுகின்றனர். உங்களுக்கு வேறு பெயர் காரணம் தெரிந்தால் கமெண்ட் பண்ணுங்க. உங்க ஊர் பெருமைய SHARE பண்ணுங்க..
News January 2, 2026
பெரம்பலூர்: ரூ.24 கோடிக்கு காய்கள் விற்பனை!

பெரம்பலூர் உழவர் சந்தையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 5,170.64 மெட்ரிக் டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்துள்ளது. இவைகள் ரூ.24 கோடியே 99 லட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்பனையாகி உள்ளது. மேலும், 27,444 விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்துள்ளனர். இதுமூலம் 10,34,346 நுகர்வோர்கள் காய்கறிகள் வாங்கி பயனடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
News January 1, 2026
பெரம்பலூர்: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

பெரம்பலூரில் கடந்த 2025-ம் ஆண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. பெரம்பலூருக்கு வருவேன் என்று ஏமாற்றிய விஜய்
2. சூனியம் வைக்க ரூ.21 லட்சம் அனுப்பியவர் கைது
3. ஆற்றில் மின்சாரம் பாய்ச்சி மீன் பிடிக்க முயன்ற இருவர் பலி
4. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மாற்றம்
5. வேப்பந்தட்டை வேத மாரியம்மன் கோயில் தேர் விவகாரம்
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!


