News January 24, 2025
பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News December 19, 2025
JUST IN: பெரம்பலூர் மாவட்டத்தில் 49,548 வாக்காளர்கள் நீக்கம்

பெரம்பலூர் மாவட்டத்தில், வாக்காளர் சிறப்பு திருத்த பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் தகவல் வெளியாகியது. அதில், SIRக்கு முன் 5,90,490 வாக்காளர்கள் மொத்தமாக இருந்த நிலையில், SIRக்கு பின் 5,40,942 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 49,548 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
News December 19, 2025
பெரம்பலூர்: வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு

பெரம்பலூர், துறைமங்கலம் பகுதியில் உள்ள டி.இ.எல்.சி பள்ளி வாக்குச்சாவடி மையத்தினை சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர் நீரஜ்கர்வால், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்த பகுதிக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் தொடர்பாக கலந்துரையாடினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News December 19, 2025
பெரம்பலூர்: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பெரம்பலூர் மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <


