News January 24, 2025
பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
Similar News
News October 22, 2025
பெரம்பலூர்: டிகிரி போதும்..அரசு வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும், IPPB வங்கியில் 348 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. கடைசி தேதி : 29.10.2025
4. சம்பளம்: ரூ.30,000
5. வயது வரம்பு: 20 – 35 (SC/ST – 40, OBC – 38)
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
7. இந்த தகவலை மறக்காம ஷேர் பண்ணுங்க
News October 22, 2025
பெரம்பலூர்: மாவட்ட ஆட்சியர் அறிவுரை

பெரம்பலூர், மாவட்ட கலெக்டர் மிருணாளினி பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விடுத்துள்ள அறிவுரையில், டெங்கு, மலேரியா, மற்றும் டைபாய்டு காய்ச்சல் பரவாமல் இருக்க குடிநீரை கொதிக்க வைத்து பருக வேண்டும், வீட்டினை சுற்றிலும் குப்பைகள் இல்லாமல் தூய்மையாக பராமரிக்க வேண்டும், மேலும் மழைநீர் தேங்காத வண்னம் பார்த்துக் கொள்ள வேண்டும், மழை நீர் தேங்கும் பொருட்களை அகற்ற வேண்டும்.
News October 22, 2025
பெரம்பலூர்: புகார் அளிக்க இதை தெரிஞ்சி வச்சிக்கோங்க!

பெரம்பலூர் மக்களே நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சேவையில் குறைகள் இருந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பணம் கொடுத்து வாங்கிய பொருளில் காலாவதி, கெட்டுப்போன, போலியானவை போன்ற குறைகள் இருந்தால், வாங்கிய பொருளின் Bill-யை வைத்து சட்டப்படி பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிப்பதன் மூலம் உரிய இழப்பீடு பெற முடியும். இதனை அனவருக்கும் SHARE பண்ணுங்க. விழிப்புணர்வுடன் இருங்கள்!