News January 24, 2025

பிரம்மதேசம் : இறந்தவரின் உடலுறுப்புகள் தானம்

image

வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த, செந்தில்குமார்(35), என்பவர், சென்னையில் காஸ் சிலிண்டர் லாரியில் பணியாற்றி கொண்டிருக்கும் போது, தவறி விழுந்ததனால், நேற்று (22.01.2025) சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் இறந்தவரின், உடல் உறுப்புகள் (கிட்னி,லிவர், தோல்)தானம் செய்யப்பட்டது. அரசு தரப்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

Similar News

News December 1, 2025

பெரம்பலூர்: வசமாக சிக்கிய தப்பி ஓடிய போக்சோ கைதி!

image

பெரம்பலூர் மாவட்டம் ஓலைப்பாடி கிராமத்தை சேர்ந்த வாஞ்சிநாதன் என்பவர், போக்சா வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், சிறையில் அடைப்பதற்காக அழைத்து சென்ற பொழுது தப்பி ஓடிவிட்டார். இதனை தொடர்ந்து வாஞ்சிநாதன், கேரள மாநிலம் சபரிமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் பெரம்பலூர் காவல் துறையினர் வாஞ்சிநாதனை சபரிமலையில் கைது செய்து பெரம்பலூர் அழைத்து வந்தனர்.

News December 1, 2025

பெரம்பலூர்: SIR பணிகள் தீவிரம்!

image

குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 98 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. பெரம்பலூா் (ம) குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் 5,90,490 வாக்காளா்கள் உள்ளனர்.

News December 1, 2025

களரம்பட்டி: ஆதிதிராவிட நல தொடக்கப்பள்ளியின் அவல நிலை

image

பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி கிராமத்தில், அரசு ஆதிதிராவிட நலத் தொடக்கப் பள்ளியின் ஓடுகள் முற்றிலும் சேதமடைந்த இடங்களில் பேனர்கள் வைத்து மழைநீர்கள் வராத அளவுக்கு மறைத்துள்ளனர். மேலும் இந்த அவலநிலை மாணவர்களுக்கு பெரிய விபத்து ஏற்படும் வகையில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவர்களுடைய பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

error: Content is protected !!