News August 4, 2024

பிரபல ரவுடி சீஸிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு

image

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.

Similar News

News November 22, 2025

சென்னை: சிறுவன் ஓட்டிய பைக்கால் எம்.பி-யின் ஓட்டுநர் பலி!

image

சென்னை கொட்டிவாக்கம் அருகே பள்ளிச் சிறுவன் நேற்று (நவ.21) பிற்பகலில் தவறான திசையில் பைக் ஓட்டி வந்துள்ளார். இந்த இரு சக்கர வாகனம் மோதியதில், மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்தவர் சுரேஷ் (50) என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து பள்ளிச் சிறுவனின் தந்தை முருகனை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்த சுரேஷ் (50) ராமநாதபுரம் எம்.பி.நவாஸ் கனியின் முகாம் அலுவலகத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 22, 2025

சென்னையில் டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் இயக்கம்

image

சென்னையில் 20 ஆண்டுகளுக்கு பிறகு டபுள்டக்கர் பேருந்துகள் மீண்டும் ஓட உள்ளன. தாம்பரம்–பிராட்வே 18ஏ வழித்தடத்தில் ஓடிய இந்த சேவை, மேம்பாலங்கள் அதிகரித்தது மற்றும் போக்குவரத்து நெரிசல் காரணமாக 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது. தற்போது மாநகர போக்குவரத்து கழகம் 20 புதிய மின்சார டபுள்டக்கர் பேருந்துகளை சேர்த்துள்ளதால், இந்த சேவை இரண்டு மாதங்களில் துவங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!