News August 4, 2024
பிரபல ரவுடி சீஸிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 10, 2025
தனியார் மருத்துவமணை உரிமம் பதிவு கட்டாயம்!

சென்னை மற்றும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்களின் கீழ் உரிமம் பதிவு செய்யாத தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்வது கட்டாயம் என ஊரக மருத்துவ நலப்பணி அமைப்பகம் தெரிவித்துள்ளது பதிவு செய்யாத மருத்துவமணை 2026 ஜுன் மாதத்திற்குள் பதிவு செய்யப்பட வேண்டும் கால அவகாசம் கொடுக்கப்படாது உரிமம் பெற்று பதிவு செய்த மருத்துவமணை 5 ஆண்டுகள் மட்டுமே அவை செல்லும் மீண்டும் புதுபிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 10, 2025
விருதுகளை அள்ளிய தமிழக அரசு

மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தால், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இரண்டு முக்கிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த பல்முனை ஒருங்கிணைப்புடன் கூடிய மெட்ரோ ரயிலுக்கான நகர்ப்புற போக்குவரத்தில் சிறந்த செயல்திறன் விருது மற்றும் சிறந்த பயணிகள் சேவைக்கான பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த விருதுகள் நவம்பர் 9 அன்று ஹரியானா குருகிராமில் நடைபெற்ற மாநாட்டில் வழங்கப்பட்டது.
News November 10, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி காவலர்களின் விவரம்

சென்னை மாவட்டம் முழுவதும் “Knights on Night Rounds” என்ற திட்டத்தின் கீழ் இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை காவல்துறை அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பெருநகர சென்னை காவல் துறையின் ஒழுங்குமுறை பிரிவினர், தங்கள் எல்லைகளில் போலீஸ் வாகனங்களில் ரவுண்ட் செய்து பொதுமக்கள் பாதுகாப்பை உறுதி செய்தனர். அவசரத்துக்காக 100-ஐ தொடர்புகொள்ளலாம்.


