News August 4, 2024
பிரபல ரவுடி சீஸிங் ராஜா மீது மேலும் ஒரு வழக்கு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஆற்காடு சுரேஷின் கூட்டாளியான சீசிங் ராஜாவை கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஆந்திராவில் போலீசார் பிடிக்க முயன்றனர். அப்போது, அவர் காரில் தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து, போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே, வேளச்சேரியில் பார் நடத்தும் ஆனந்தனை மிரட்டி பணம் கேட்டதாக சீசிங் ராஜா மீது வேளச்சேரி போலீசார் நேற்று (ஆகஸ்ட் 3) மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர்.
Similar News
News November 24, 2025
கார்த்திகை தீபம் – சிறப்பு பேருந்துகள் இயக்கம்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு டிச.02, 03 அன்று அதிநவீன சொகுசு குளிர்சாதன பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், திருவண்ணாமலையில் நடைபெறும் பௌர்ணமியை முன்னிட்டு சென்னையிலிருந்து 160 குளிர்சாதன மற்றும் குளிர்சாதனமில்லா இருக்கை, படுக்கை வசதியுடன் கூடிய பேருந்துகள் 03 மற்றும் 04 டிசம்பர் 2025 அன்று இயக்கப்படுகின்றன. www.tnstc.in மற்றும் TNSTC official app மூலம் முன்பதிவு செய்யலாம்.
News November 24, 2025
சென்னையில் ரூ.50கோடி ஜிஎஸ்டி முறைகேடு

சென்னையில் ரூ.50 கோடி அளவிற்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு கண்டறியப்பட்டது என வடசென்னை ஜிஎஸ்டி ஆணையரகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 12 போலி நிறுவனங்கள் மூலம் ரூ.50 கோடி வரி ஏய்ப்பு ஒருவரை ஜிஎஸ்டி அதிகாரிகள் கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில், 90 போலி நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 196 சிம் கார்ட் கவர்கள் மற்றும் சிம் கார்டுகள், 42 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
News November 24, 2025
JUST IN: சென்னையில் சார்பதிவாளர் அதிரடி கைது!

சென்னையில் போலி ஆவணம் மூலம் நிலம் பத்திரப்பதிவு செய்ததாக சென்னை அம்பத்தூர் சார்பதிவாளர் ஜாபர் சாதிக்கை இன்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மாதவரத்தில் சார்பதிவாளராக பணியாற்றிய போது போலியாக நிலம் பத்திரப்பதிவு செய்ய உடந்தையாக இருந்ததாக புகார் வந்த நிலையில், சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியில் இருந்தபோதே ஜாபர் சாதிக்கை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை கைது செய்தது.


