News April 4, 2025
பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News January 4, 2026
JUST IN புதுவை: ஒரு IPS அதிகாரி உட்பட 3 பேர் பணியிட மாற்றம்

புதுச்சேரியில், தவெக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகளை கடுமையாக கண்டித்ததன் முலம் பிரபலமான பெண் IPS அதிகாரி ஈஷா சிங் டெல்லிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒரு IAS அதிகாரி, ஈஷா சிங் உட்பட 2 IPS அதிகாரிகளும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
News January 4, 2026
புதுவை: செவிலியர் பணி குறித்து இணையத்தில் வெளியீடு

புதுவை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செவிலியர் பதவிக்கான நேரடி நியமனத்திற்கு விண்ணப்பித்தவர்கள், வழங்கப்பட்ட தற்காலிக மதிப்பெண்கள் மற்றும் முன்மொழியப்பட்ட இட ஒதுக்கீடு ஆகியவை அதிகாரப்பூர்வ இணையதளமான www.igmcri.edu.in இல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான ஆட்சேபனைகளை ஜன.10-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 4, 2026
புதுச்சேரி: இனி வங்கிக்கு செல்ல தேவையில்லை!

உங்கள் பேங்க் பேலன்ஸை தெரிந்துகொள்ள நீங்கள் வங்கிக்கு செல்ல வேண்டாம். உங்கள் போனில் இருந்து ஒரு மிஸ்ட் கால் குடுத்தால் போதும். உங்களுக்கு மெசேஜாக வந்து விடும். SBI-09223766666, ICICI- 09554612612 HDFC-18002703333, AXIS-18004195955, Union Bank-09223006586, Canara- 09015734734, Bank of Baroda (BOB) 846800111, PNB-18001802221, Indian Bank-9677633000, Bank of India (BOI)-09266135135. ஷேர் பண்ணுங்க!


