News April 4, 2025
பிரதமா் பயிா் காப்பீடு திட்டம், புதுவை விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநா் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் விவசாயிகள், தற்போது சாகுபடி செய்துள்ள நெல், கரும்பு மற்றும் வாழை சாகுபடியை பிரதமா் பயிா் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீடு செய்து பயன் பெறலாம். நடப்பாண்டில் பயிா் செய்த விவசாயிகள் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் தங்கள் பகுதியில் உள்ள பொது சேவை மையம் மூலமாக பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 18, 2025
முன்னாள் முதல்வர் நாராயணசாமி தீபாவளி வாழ்த்து

புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இன்று வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், நாம் கொண்டாடும் பண்டிகைகளில் தீபாவளிக்கு என தனியிடம் உண்டு, சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மகிழ்ச்சி அள்ளித்தரும் திருநாள் தீபாவளி சாதி, மதம், இனம், மொழி என்ற பேதமின்றி, சமத்துவத்தின் அடையாளமாக தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் என்று தெரிவித்தார்.
News October 18, 2025
நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா

புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் நாட்டிய சாஸ்திராலயாவின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது. இதில் முதலமைசர் ரங்கசாமி, நாட்டியாலயா நிறுவனர் ராஜமாணிக்கம் எழுத்தாளர் கலா விசு கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி சிறப்புரையாற்றினர். சாஸ்திராலயா ஆசிரியர்கள் உமா ரமேஷ், மாதவி ஜெயப்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் 13 மாணவிகளின் சலங்கை பூஜை விழா நடைபெற்றது.
News October 18, 2025
புதுச்சேரி: தீபாவளி வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்

புதுச்சேரி முதலமைச்சர் தீபாவளி வாழ்த்து செய்தியில், தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் பரவலாக கொண்டாடப்படுவதற்கு, இருளை நீக்கி ஒளியும், தீமையை அழித்து நன்மையும், அறியாமையை அகற்றி அறிவும் மேலோங்கும் என்ற ஆழமான நம்பிக்கையே அதன் காரணம் ஆகும். உங்கள் அனைவரது வாழ்வையும் மகிழ்ச்சியால் ஒளிர செய்யட்டும். அனைவரும் பாதுகாப்பாக மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.