News April 2, 2025
பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News December 12, 2025
மதுரை: Driving Licence-க்கு முக்கிய Update!

மதுரை மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News December 12, 2025
அழகர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

அழகர்கோவில் கள்ளழகர் கோயில், அதன் உபகோயிலான தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், வண்டியூர் வீரராகவ பெருமாள் கோயில் ஆகியற்றில் மார்கழி பிறப்பை முன்னிட்டு டிச.16 முதல் 2026 ஜன.13 வரை நடை திறப்பில் மாற்றம் செய்யப்படுகிறது. அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 12:00 மணிக்கு சாத்தப்படும். மதியம் 3:30 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7:00 மணிக்கு நடை அடைக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
News December 12, 2025
தீபத்தூண் என்பதற்கு ஆதாரம் இல்லை: தமிழக அரசு வாதம்

திருப்பரங்குன்றம் வழக்கில், இன்று (டிச.,12) நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை தொடங்கியது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ராமன், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், மலையில் தீபம் ஏற்றுவது என்பது கோவில் நிர்வாகம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வாதம் வைத்துள்ளது.


