News April 2, 2025
பிரதமர் வருகை.. ட்ரோன் பறக்கத் தடை – ஆட்சியர்

பிரதமர் நரேந்திர மோடி இராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்திற்கு விமான மூலம் வருகை புரிந்து அன்றைய தினமே மதுரையிலிருந்து செல்ல இருப்பதால், மதுரை விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிக்கும் வழிகள் மற்றும் மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் 06.04.2025 அன்று ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News January 1, 2026
மதுரை : ஆட்டோ டிரைவர் வெட்டி கொடூர கொலை

மதுரை அருகே விருசமரத்து ஊரணி பகுதியை சேர்ந்த மூக்கையா மகன் முனீஸ்(26) ஆட்டோ ஓட்டுநராக உள்ளார். நேற்றிரவு மதுரை விமான நிலைய சாலையில் தனது சகோதரியுடன் பேசி கொண்டிருந்த போது பெருங்குடியை சேர்ந்த 4 பேர் முனீஸிடம் வாக்குவாதம் செய்து கத்தி, அரிவாள் கொண்டு சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். முன்பகை காரணமாக கொலை நடந்ததா என அவனியாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 1, 2026
மதுரையில் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

மதுரை மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா இதை தெரிந்து கொள்ளுங்கள். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும்.மீறினால் மதுரை வாடகை தீர்வாளர் அதிகாரிகளிடம் 9445000449, 9445000450, 8870678220, 9003314703 புகாரளிக்கலாம். தெரியாதவர்களுக்கு SHARE செய்யவும்.
News January 1, 2026
மதுரை: பிள்ளைகள் கைவிட்டதால்… மூதாட்டி சோக முடிவு!

பேரையூர் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் வெள்ளையம்மாள்(93). கணவருடன் தனித்து வசித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரும் இறந்து போனார். இவரது குழந்தைகளில் சிலர் இறந்து போன நிலையில், இருக்கும் மற்ற குழந்தைகள் இவரை கவனிக்கவில்லை. இதனால் எருக்க இலையை அரைத்து குடித்துள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று முன்தினம் இறந்து போனார். இதுகுறித்து சாப்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


