News May 7, 2025

பிரதமர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல், வாலிபர் கைது

image

டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மூலம் நாகை மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, மிரட்டல் விடுத்த ராமநாயக்கன் குளம் தெருவை சேர்ந்த கணேஷ்குமார்(33) என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.

Similar News

News October 29, 2025

நாகை: உங்க பெயரை மாற்றணுமா? SUPER CHANCE

image

உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இணையத்தில் விண்ணப்பிக்க இங்கு <>கிளிக் <<>>செய்யவும். தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க

News October 29, 2025

நாகை: 12th போதும்.. ரயில்வேயில் வேலை

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

News October 29, 2025

நாகையில் தீக்கிரையான வீடு

image

திருக்குவளை அருகே 119 அனக்குடி ஊராட்சிக்குட்பட்ட மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் இடும்பையன் என்பவரது மனைவி மல்லிகா. இவர்களது கூரை வீடு மின் கசிவு காரணமாக நேற்று மாலை திடீரென தீ பிடித்த எரிந்தது. அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயை அணைக்க முயற்சி செய்தும், வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் சேதமடைந்தன. இதுகுறித்து வலிவலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!