News August 9, 2024

பிரதமருக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்

image

நாகர்கோவிலில் அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “தேசியக் கொடியை மதிக்கக் கூடிய நாகரிகத்தை இந்த நாட்டில் இருக்கக்கூடிய அத்தனை பேரும் பெற்றிருக்கின்றோம்; நான் பிரதமருக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்; சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஆர் எஸ் எஸ் அனைத்து அலுவலகங்களிலும் ஏற்றுவதற்கு பிரதமர் வலியுறுத்த வேண்டும்; அவர் இதை செய்வாரா? என நான் கேட்கின்றேன்” என்றார்

Similar News

News December 14, 2025

குமரியில் +2 மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தக்கலை ஆசான்கிணறு பகுதி ஜெயவேல் – மல்லிகா தம்பதியின் மூத்தமகள் நாகர்கோவிலில் உள்ள பள்ளியில் +2 படித்து வந்தார். பத்மநாபபுரம் அரண்மனை பகுதியில் கடை நடத்தி வரும் மல்லிகா, நேற்று மதியம் மகளுக்கு போன் செய்த போது அவர் போனை எடுக்காததால் சந்தேகத்துடன் வீட்டுக்கு வந்த போது வீடு திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே பார்த்தபோது மகள் மின் விசிறியில் தூக்கில் இறந்த நிலையில் காணப்பட்டார். தக்கலை போலீசார் விசாரணை.

News December 14, 2025

குமரி மாவட்ட அளவிலான அஞ்சலக குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் குறைகள் இருப்பின் அதனை இக்கூட்டத்தில் நேரில் தெரிவிக்கலாம் (அல்லது) தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

News December 14, 2025

குமரி மாவட்ட அளவிலான அஞ்சலக குறை தீர்க்கும் நாள் கூட்டம்

image

இந்திய அஞ்சல் துறை சார்பாக கன்னியாகுமரி மாவட்ட அளவிலான மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் 24.12.2025 அன்று 10.30 மணியளவில் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் வைத்து நடைபெற உள்ளது. அஞ்சல்துறை சேவையில் குறைகள் இருப்பின் அதனை இக்கூட்டத்தில் நேரில் தெரிவிக்கலாம் (அல்லது) தபால் மூலமாக உரிய ஆவணங்களுடன் 22 ஆம் தேதிக்குள் தெரிவிக்கும்படி அஞ்சலக கண்காணிப்பாளர் செந்தில் குமார் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!