News April 25, 2025
பின்னவாசல்: குளத்தில் மூழ்கி மாணவன் பலி

திருவாரூர் மாவட்டம், பின்னவாசல் அருகே பிச்சைப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவன் சத்தியசாய் பொதுத்தேர்வு எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று தனது நண்பர்களுடன் அருகில் உள்ள குளம் ஒன்றில் குளிக்க சென்ற சத்தியசாய் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News October 30, 2025
திருவாரூர்: கிராம ஊராட்சிகளில் இதை மறக்காதிங்க!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளில், உள்ளாட்சிகள் தினத்தினை முன்னிட்டு, வருகின்ற 01.11.2025 சனிக்கிழமை அன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும் இதில் கிராம வளர்ச்சிகள் குறித்த பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் வ.மோகனச்சந்திரன் அறிவித்துள்ளார்.
News October 30, 2025
திருவாரூர்: கொக்கு வேட்டை-வாலிபர் கைது!

முத்துப்பேட்டை வனவர் சீனிவாசன் தலைமையில் வனத்துறையினர் மங்கனங்காடு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது அப்பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்(26) என்பவர் அவரது வீட்டில் 2 கொக்கு 2 மடையன் போன்ற பறவைகளை உயிருடன் வேட்டையாடி, விற்பனைக்காக கூண்டில் வைத்திருந்தது தெரியவந்தது அதன்படி விக்னேசை கைது செய்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் அடிப்படையில் ரூபாய் 25,000 அபராதம் விதிக்கப்பட்டது.
News October 30, 2025
திருவாரூர் மாவட்டத்தில் இரவு ரோந்து பணி விவரங்கள்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!


