News March 14, 2025

பித்ருக்கள் தோஷம் நீக்கும் வீரசோழபுரம் சிவன்

image

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் சிறப்பாக நான்கு வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க

Similar News

News March 15, 2025

கள்ளக்குறிச்சியில் அகழாய்வு நடக்கும் இடங்கள்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொல்லியல் அகழாய்வு நடத்த திட்டமிடபட்டுள்ளது என தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்தது. கள்ளக்குறிச்சியில் எந்த இடத்தில் அகழாய்வு நடத்தப்பட உள்ளது என்பது குறித்து அறியலாம். சேந்தமங்கலம் கோட்டை, தியாக துர்கம் கோட்டை, தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பிச்சாடனர் சிற்பம் ஆகிய இடங்களில் அகழாய்வு நடக்க உள்ளது.

News March 14, 2025

மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் இன்று மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குற்ற வழக்குகளை குறைப்பது குறித்தும், கோப்பு எடுக்காத வழக்குகள் குறித்தும், உடனடியாக முடிக்க வேண்டிய வழக்குகள் குறித்தும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டறிந்தார்.

News March 14, 2025

கள்ளக்குறிச்சி கலெக்டர் தகவல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கோர்ட்டுகளில், பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 22 இருசக்கர வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ஆம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் தாசில்தாரை அணுகி ஏலம் எடுத்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்த அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!