News August 2, 2024

பாலூட்டுவதன் மூலம் மார்பக புற்றுநோய் தவிர்க்கப்படும்

image

திருப்பத்தூர் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரவிழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தாய்மார்கள் மற்றும் தாய்ப்பால் வழங்கும் கொடையாளர்களுக்கு பரிசுப்பொருட்களை ஆட்சியர் வழங்கினார். இதில் பேசிய ஆட்சியர், பாலுட்டுவதன் மூலம் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படும் கோபம் தடுக்கப்படும். மேலும்,பாலூட்டும் பெண்களுக்கு பிற்காலத்தில் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் தவிர்க்கப்படுகிறது என்று கூறினார்.

Similar News

News October 27, 2025

திருப்பத்தூர்: சேமிப்பு கிடங்கில் நடந்த பயங்கரம்

image

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பாங்கி ஷாப் பகுதியை சேர்ந்தவர் அக்பர் பாஷா. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக துத்திப்பட்டு ஊராட்சி அம்பேத்கார் நகர் முதல் தெருவில் தோல் கழிவுகள் சேமிப்பு கிடங்கு நடத்தி வருகிறார். இந்த நிலையில் கிடங்கில் நேற்று (அக்.26) மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் உமராபாத் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

News October 27, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்.26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணியில் காவல்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்கள் அவசர காலத்தில் உட்கோட்ட போலீஸ் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் பெயரும் வழங்கப்பட்டுள்ளது.

News October 26, 2025

திருப்பத்தூர்: 10th போதும் – அரசு பள்ளியில் வேலை ரெடி

image

திருப்பத்தூர் மக்களே.. மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் கடைசி தேதி அக்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர் போன்ற பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ரூ.18,000-ரூ.2,09,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பதாரர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!