News October 23, 2024

பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர்கள் கைது

image

பெரிய காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை, காஞ்சிபுரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான கிஷோர் (26), ரித்தீஷ் (21), வெங்கட் ஆகியோர் இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்-அப் மூலம் பழகி ஆசை வார்த்தைக்குறி பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து, சிறுமி தனது தாயிடம் தெரிவிக்க, தாய் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் போலீசார் மூவரையும் கைது செய்தனர்.

Similar News

News September 19, 2025

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

image

இன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன்வெளியிட வாக்காளர் பதிவு அலுவலர் முருகானந்தம் பெற்று கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ உள்ளார்.

News September 18, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (செப்.18) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 18, 2025

குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டு திறப்பு

image

இன்று காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் ஒன்றியம், டைட்டன் நிறுவனம் மற்றும் தேசிய வேளாண் நிறுவனம் இணைந்து புணரமைக்கப்பட்ட குண்டுப்பெரும்பேடு ஏரியின் கல்வெட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் திறந்து வைத்தார். உடன் டைட்டன் நிறுவன துணைத்தலைவர் ரேவதி காந்த், நீர்வளத்துறை செயற்பொறியாளர் அருள்மொழி, உதவி செயற்பொறியாளர் மார்கண்டேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!