News February 18, 2025
பாலியல் புகார் உதவி தலைமை ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News January 3, 2026
புதுக்கோட்டை: இரண்டு நல்ல விஷயங்கள்- ஒரே கோயில்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் காசி விஸ்வநாதர் கோயில் அமைந்துள்ளது. இங்கு காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கியும் மற்றும் விசாலாட்சி அம்மாள் தெற்கு நோக்கியும் காட்சியளிக்கின்றனர். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் பெற வழிபாட்டு பிரசித்தி பெற்ற தளமாகும். திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இங்கு சென்று வழிபடலாம். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News January 3, 2026
புதுக்கோட்டை: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

புதுக்கோட்டை மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <
News January 3, 2026
புதுக்கோட்டை: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!


