News February 18, 2025
பாலியல் புகார் உதவி தலைமை ஆசிரியர் கைது

புதுக்கோட்டை மாவட்டத்தில் உதவி தலைமை ஆசிரியர் மீது பள்ளி மாணவிகள் 7 பேர் பாலியல் புகாரளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரிமளம் அருகே உள்ள அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சைல்டுலைன் எண்ணைத் தொடர்பு கொண்டு பாலியல் துன்புறுத்தல் குறித்து புகார் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்கு சென்ற போலீசார், உதவி தலைமை ஆசிரியர் பெருமாளை கைது செய்து போக்சோ உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News January 8, 2026
புதுகை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுகை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு இங்கு <
News January 8, 2026
புதுகை: 4,98,028 குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு!

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை 4,98,208 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அருணா தற்பொழுது அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 3000 ரொக்க பணம் மற்றும் பொங்கல் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்கள் தங்களுடைய அர்பன் விநியோக கடையில் கொடுக்கப்பட்டுள்ள டோக்கன் குறிக்கப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் சென்று பெற்றுக்கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
News January 8, 2026
புதுகை: அரசு பேருந்து மோதி விபத்து; பெண் படுகாயம்!

சாந்தநாதபுரத்தை சேர்ந்தவர் அஞ்சலிதேவி (59). இவர் இலுப்பூர் பஸ் நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராதவிதமாக அஞ்சலிதேவி மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அஞ்சலிதேவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


