News April 24, 2025

பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

image

சாலிகிராமம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) அந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.

Similar News

News November 13, 2025

டிகிரி போதும் சென்னையில் சூப்பர் வேலை- APPLY HERE!

image

சென்னையில் Mahindra Finance நிறுவனத்தில் Sales Executive பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு எதாவது ஒரு டிகிரி முடித்திருந்தால் போதும். அனுபவத்தின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்டும். விருப்பமுள்ள ஆண்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் டிசம்பர்.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். சென்னையில் வேலை தேடுவோருக்கு சூப்பரான வாய்ப்பு. மிஸ் பண்ணிடாதீங்க. உடனே இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.

News November 13, 2025

சென்னையில் சாதனை மங்கைக்கு உற்சாக வரவேற்பு

image

13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி 52 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு இன்று சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதனால் சென்னை வந்த அவருக்கு மேளதாளங்கள் முழங்க பிரமாண்ட மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News November 13, 2025

சென்னை: moj Appல் பழக்கம்; சீரழிந்த பெண்ணின் வாழ்கை!

image

புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண், மோஜ் செயலி மூலம் குமரியைச் சேர்ந்த லிபின் ராஜ்(25) என்பவருடன் பழகியுள்ளார். கடந்த 4 மாதங்களாக பழகி வந்த லிபின் ராஜ், நாளடைவில் இளம்பெண்ணை ஆபாசமாகப் புகைப்படம் எடுத்து, அதை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஒரு கட்டத்தில் இச்சைக்கு இணங்க மறுக்கவே அப்பெண்ணின் தாயாருக்கு புகைப்படங்களை அனுப்பியுள்ளார். புகாரின் பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!