News April 24, 2025
பாலியல் தொழில் நடத்திய 2 பேர் கைது

சாலிகிராமம் பகுதியில் பாலியல் தொழில் நடப்பதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று (ஏப்ரல் 23) அந்த இடத்தில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
Similar News
News December 3, 2025
சென்னையில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையின் கடலோர பாதுகாப்புக் குழுமத்திலுள்ள அதிவிரைவுப் படகுகளை இயக்குதல் & பராமரித்தல் பணிகளுக்கு, வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய 50 வயதுக்குட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பத்தை டிச.17-க்குள் சமர்ப்பிக்கலாம். விரிவான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது.
News December 3, 2025
சென்னையில் சைபர் கிரைம் மோசடி: ரூ.2.04 கோடி மீட்பு!

சைபர் கிரைம் மோசடியால் தினந்தோறும் மக்கள் பாதித்த வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நவம்பர் மாதத்தில் மட்டும் 150பேர் சைபர் கிரைம் மோசடி மூலம் இழந்த ரூ.2.04கோடி பணம் மீட்கப்பட்டுள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் சைபர் கிரைமால் பாதிக்கப்பட்டவர்கள் 1930 என்ற எண்ணில் உடனடியாக தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
News December 3, 2025
ALERT: சென்னையில் மிக கனமழை பெய்யும்!

சென்னையில் இன்று ( டிச.03) மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். ஏற்கனவே இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், செங்கை, திருவள்ளுர், காஞ்சிக்கும் ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெளுத்து வாங்கும் மழை ஓயப்போவதில்லை. எனவே முன்னெச்சரிக்கையா இருங்க மக்களே! மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


