News March 25, 2025
பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.
Similar News
News September 15, 2025
திருவள்ளூர்: SBI வங்கியில் வேலை

SBI வங்கியில் காலியாக உள்ளப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிகளுக்கு 25 முதல் 35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.64,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு https://sbi.bank.in/web/careers/current-openings என்ற இணையளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க அக்டோபர் 2-ம் தேதி கடைசி ஆகும். (நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News September 15, 2025
ஆவடி: சொந்த வீடு இருக்கா? உடனே பண்ணுங்க

ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025-26ம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான ஏப்ரல் 2025 முதல் செப்.2025 வரை சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்.30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கெடுவுக்குள் வரியை செலுத்த தவறினால், அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News September 15, 2025
ஆவடி அருகே மனைவியை கொன்ற கணவன் தற்கொலை

ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரண்ராஜ். இவரது மனைவி ஷீலா. சரண்ராஜிக்கு மனைவியின் நடத்தியைில் சந்தேகம் ஏற்பட்டது. இதன் காரணமாக கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டத்தில் சரண்ராஜ், கத்தியால் ஷீலா-வை குத்தியதில் உயிரிழந்தார். இதனையடுத்து சரண்ராஜ், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.