News November 24, 2024

பாலின வன்முறைக்கெதிரான பிரச்சாரப் பேரணி

image

தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் இன்று செய்தி வெளியிட்டுள்ளார். அதில், நாளை (நவ.25) காலை 10.30 மணி அளவில் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் பாலின வன்முறைக்கெதிரான பிரச்சாரப் பேரணியை தொடங்கி வைக்க உள்ளார். பேரணி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் சென்று பாலின வன்முறைக்கு எதிரான உறுதிமொழி எடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 18, 2025

தென்காசி: பெண்களுக்கு அரிய வாய்ப்பு

image

தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசை இலத்தூர் மெயின் சாலையில் அமைந்துள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிச.22ம் தேதி முதல் தையல் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்த பின்பு மத்திய அரசின் சான்றிதழ்களும் வழங்கப்படுவதால் கிராமப்புற பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE!

News December 18, 2025

தென்காசியில் சிசிடிவி பழுது இலவச பயிற்சி!

image

செங்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட இலத்தூர் பழைய எஸ்பி ஆபிஸ் அருகில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் சார்பில் ஊரக வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் கீழ் டிசம்பர் 22ம் தேதி முதல் 13 நாட்களுக்கு சிசிடிவி பொருத்துதல் மற்றும் பழுது நீக்குதல் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. மேலும், விவரங்களுக்கு 8825794607 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது SHARE IT

News December 18, 2025

குற்றாலநாதர் கோயில் திருவிழா நிகழ்ச்சிகள் முழு அறிவிப்பு

image

குற்றாலத்தில் அமைந்துள்ள திருகுற்றால நாதர்- குழல்வாய்மொழி அம்பாள் திருவாதிரை திருவிழா நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிச.25ம் தேதி அதிகாலை 5.40 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. 29ம் தேதி உள்பிரகாரத்தில் நடராஜர் பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறும் ஜனவரி 2 காலை 9 மணிக்கு பச்சை சாத்தி தாண்டவ தீபாரதனை நடைபெறும் 3ம் தேதி அதிகாலை 3:30 மணிக்கு தாண்டவ தீபாராதனை நடைபெறும்.

error: Content is protected !!