News January 22, 2025

பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

image

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News

News December 6, 2025

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

image

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

கள்ளக்குறிச்சியை சேர்ந்த 8 பேர் கடத்தல் வழக்கில் ஆந்திராவில் கைது!

image

கள்ளக்குறிச்சி: ஆந்திரா, சின்னமுச்சுராள்ள குட்டா என்ற பகுதியில் நேற்று செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு கும்பலாக நின்றிருந்த 8 பேர், போலீசாரை கண்டதும் சிதறி ஓடினர். அவர்களை பிடித்து விசாரித்ததில், அனைவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர்கள் என்பதும், செம்மரங்களை கடத்தியதும் தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், 12 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.

News December 6, 2025

கள்ளக்குறிச்சி: தந்தை வீட்டில் வசித்து வந்த பெண் தற்கொலை!

image

கள்ளக்குறிச்சி: சின்னசேலம், மண்மலை கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மனைவி கவிதா (33). கோவிந்தன் கடந்த ஆண்டு இறந்து விட்டார். இதனால் கவிதா காட்டனந்தல் கிராமத்தில் உள்ள தனது தந்தை சேகர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், கவிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து சின்னசேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!