News January 22, 2025
பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News September 15, 2025
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இன்று (15.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஜீவா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள
சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதில் ஏராளமான பொதுக்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுவாக அளித்தனர்.
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: வங்கியில் வேலை, ரூ. 1 லட்சம் சம்பளம்

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய பணியிடங்கள், நேர்முகத் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
▶️ பணியிடங்கள்: 122
▶️ சம்பளம்: ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை
▶️ வயது வரம்பு: 25 முதல் 35 வரை
▶️ விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்.2
மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <
News September 15, 2025
கள்ளக்குறிச்சி: போலீசார் சிறுமியிடம் அத்துமீறல்

கரியாலூரில் காவல் நிலையம் உள்ளது, இந்த காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவலர் ஒருவர் தனது வழக்கு விசாரணைக்காக ஒருவரை கைது செய்திருந்தார். கைது செய்யப்பட்டவரின் மகள், தனது தந்தையை பார்க்க வந்த போது 17 வயது சிறுமியிடம் காவலர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி டிஐஜி அலுவலகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காவலரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.