News January 22, 2025
பாலினத்தை கண்டறிந்து கூறிய வாலிபர் கைது

கள்ளக்குறிச்சி வ.உ.சி நகர் பகுதியில் உள்ள வீட்டில், கருவில் உள்ள சிசு ஆணா, பெண்ணா என ஸ்கேன் இயந்திரம் மூலமாக சிசுவின் பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த ரஞ்சித் குமார் என்பவரை போலீசார் நேற்று (ஜன.21) கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு ஸ்கேன் இயந்திரங்கள், கருக்கலைப்பு செய்யும் மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Similar News
News December 13, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரின் முக்கிய தகவல்!

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று சமுதாய & வகுப்பு நல்லிணக்கத்திற்கான ‘கபீர் புரஸ்கார்’ விருது தமிழக முதல்வரால் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் அனைவரும் இவ்விருதினை பெற தகுதி உடையவர்கள். இவ்விருதுக்கான விண்ணப்பத்தை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்பங்களை வரும், டிச.15ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்.
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

கள்ளக்குறிச்சி மக்களே.., ’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT
News December 13, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டிலிருந்து சென்றவர் சலடலாமா மீட்பு!

கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் பகுதியை சேர்ந்தவர் அ.பாக்கியராஜ்(39), ஆட்டோ ஓட்டுநர். இவர் கடந்த டிச.8 வீட்டை விட்டு வெளியே சென்று திரும்ப வராததால், பாக்கியராஜின் மனைவி தீபா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், பாக்கியராஜ் குளத்தில் இருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார். பின், தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு உடல் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.


