News August 10, 2024
பாலாற்றில் நீரில் மூழ்கி சிறுமி பலி

பள்ளிகொண்டா அடுத்த கந்தனேரி பாலாற்றில் தன் அக்காவுடன் குளிக்க சென்ற 8 வயது சிறுமி திவ்யா நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார். இது குறித்த தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்றுள்ளனர். நாளை பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட உள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News October 17, 2025
வேலூர் தமிழறிஞர்கள் உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலூர் மாவட்டத்தில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் உதவி தொகை பெற தமிழ் அறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி துணை இயக்குநரிடம் நவம்பர் மாதம் 17-ம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithural.org என்ற இணையதளம் அல்லது 0416-2256166 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
வேலூர்: பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடு விதிப்பு

தீபாவளி பண்டிகை மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். அன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். இந்நிலையில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (அக்.16) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News October 17, 2025
வேலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.16) இரவு 10 மணி முதல் இன்று (அக்.17) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!