News April 17, 2025

பார்வைத்திறன் குறைபாடுள்ளோர் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப் பள்ளியில் அந்த கல்வியாண்டிற்கு 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கூடுதல் விவரங்களுக்கு பார்வைத்திறன் குறைபாடுள்ளோருக்கான அரசு தொடக்கப்பள்ளி, அம்பேத்கர் சிலை அருகில் என்ற முகவரியிலோ,7010498011,9894945457 என்ற அலைபேசி எண்களிலோ அல்லது 04575-240458 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 5, 2025

சிவகங்கை: சாலை விபத்தில் வாகன ஓட்டிகள் 17 பேர் பலி

image

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஆயிரத்து 154 சாலை விபத்துக்களில் 358 பேர் உயிரிழந்துள்ளனர். 791 பேர் காயம் அடைந்தனர். மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள அபாயகரமான வளைவு, அதி வேகம், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவைகளால் தினமும் விபத்துக்கள் நடக்கின்றது. இதில் இருசக்கர வாகன விபத்துக்களில் இறந்தவர்களே அதிகம். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

News December 5, 2025

சிவகங்கை: கொத்தடிமையாக இருந்த குடும்பம் மீட்பு

image

தலக்காவயல் கிராமத்தில் கொத்தடிமை முறையில் ஒரு குடும்பம் வேலை செய்ய வைக்கப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் தேவகோட்டை சார்பு ஆட்சியர், வட்டாட்சியர்,  ஐ.ஆர்.சி.டி.சி குழுவினர் இணைந்து மேற்கொண்ட சோதனையில், பாரதிராஜா, தனது ஆடுகளை மேய்ப்பதற்காக வரதராஜன், சரண்யா, அவர்களது ஒன்றரை வயது குழந்தையை கொத்தடிமைகளாக வைத்திருப்பது உறுதியானது. அந்த குடும்பம் மீட்கப்பட்டு, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

News December 5, 2025

சிவகங்கை: இனி Whatsapp மூலம் ஆதார் கார்டு!.

image

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!