News May 10, 2024
பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த விழிப்புணர்வு

நீடாமங்கலத்தில் கிரீன் நீடா சார்பில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஈச்சங்கோட்டை டாக்டர் எம்.எஸ்.சாமிநாதன் வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு களப்பயிற்சி நடைபெறுகிறது. மூன்றாம் நாளான இன்று மாணவிகளுக்கு பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் அதன் முக்கியத்துவம் மற்றும் பயிரிடும் முறை குறித்தும் கும்பகோணத்தை சேர்ந்த பசுமை எட்வின் விளக்கமளித்தார்.
Similar News
News December 6, 2025
திருவாரூர்: தவெக சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

திருவாரூர் மேற்கு மாவட்ட தவெக சார்பில், அம்பேத்கரின் 70வது நினைவு தினம் இன்று மன்னார்குடியில் அனுசரிக்கப்பட்டது. மன்னார்குடி பெருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு, தமிழக வெற்றிக் கழகத்தின் திருவாரூர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில், தவெக தொண்டர்கள் அம்பேத்கரின் உருவ சிலைக்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
News December 6, 2025
திருவாரூர்: பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை!

காரியமங்கலம் கிராமத்தில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர் பாண்டியன் தலைமையில், 22 நபர்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்தை சேதப்படுத்திய வழக்கு திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்த நிலையில், இன்று பி .ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, திருவாரூர் மகிளா நீதி மன்ற நீதிபதி சரத்ராஜ் அதிரடி உத்தரவுவிடுத்தார்.
News December 6, 2025
திருவாரூர் ரயில் மறியல் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாரூர் மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் (டிசம்பர் 7) அன்று நடைபெற இருப்பதாக தமிழ்நாடு விவசாய சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர் பாண்டியன் அறிவித்திருந்தார். இந்நிலையில் ஒன்றிய அரசு மேகதாது அணை தொடர்பான திட்ட அறிக்கையை கர்நாடகத்திற்கு திருப்பி அனுப்பியதாக கூறப்பட்ட காரணத்தினால், தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.


