News April 14, 2025

பாம்பு கடித்து 12ஆம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

image

ஓடுகத்தூர் அடுத்த எடைத்தெரு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகன் – செல்வி தம்பதி. இவர்களின் மகள் ஷாலினி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டின் அருகே செடியில் மறைந்திருந்த விஷப்பாம்பு ஒன்று மாணவியை கடித்தது. வலியால் துடித்த அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 3, 2025

வேலூர் மாவட்ட காவல் துறை அறிவிப்பு

image

திருவண்ணாமலை மகா தீபத்திருநாளையொட்டி திருவண்ணாமலை நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க (டிச.2) முதல் (டிச.5) வரை பெங்களூரு, கிருஷ்ணகிரி மற்றும் சித்தூரிலிருந்து விழுப்புரம், கடலூர், புதுச்சேரி நோக்கிச் செல்லும் கனரக, இலகு ரகவாகனங்கள் அனைத்தும் வேலூர், கண்ணமங்கலம், திருவண்ணாமலை வழியாக செல்ல தடை விதிக்கப்படுகிறது. மாறாக அனைத்து வாகனங்களும் வேலூர் ஆற்காடு வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News December 3, 2025

வேலூர்: மின்வேலியால் தந்தை, மகன்கள் பலியான பரிதாபம்!

image

வேலூர்: ஒடுகத்தூர், ராமாநாயணிகுப்பம் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (டிச.1) வயலுக்கு வைத்திருந்த வேலியால் மின்சாரம் தாக்கி தந்தை மற்றும் 2 மகன்கள் ஜானகிராமன் (55), விக்காஸ் (25), ஜீவா (22) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் வயலுக்கு மின்வேலி அமைத்த அதே பகுதியை சேர்ந்த சங்கரை (52) இன்று கைது செய்தனர்.

News December 3, 2025

வேலூர்: இரவு ரோந்துப் பணி விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களான குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிச.02) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!