News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 28, 2025
BREAKING: தனுஷ்கோடியில் இருந்து மக்கள் வெளியேற்றம்!

டிட்வா புயல் காரணமாக சூறைக்காற்று பலமாக வீசி வருகிறது. தங்கச்சி மடம் அருகே குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பொது மக்களின் நலன்கருதி தனுஷ்கோடியில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றம். டிட்வா புயல் காரணமாக தனுஷ்கோடிக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 28, 2025
ராமநாதபுரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் லேசான மழை முதல் கனமான மழை பெய்கிறது. இந்நிலையில் ராமநாதபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தென்மாவட்டங்களான தூத்துக்குடி, குமரி, ராமநாதபுரம், நெல்லை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி ஆகிய 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
News November 28, 2025
பாம்பன் பகுதி மக்களுக்கு முக்கிய எண்கள் அறிவிப்பு!

பாம்பன் பகுதியில் புயல் காரணமாக கனமழை மற்றும் 60 கிலோ மீட்டருக்கும் மேல் பலத்த சூறாவளி காற்று வீசுகிறது. இந்நிலையில், பாம்பன் ஊராட்சி நிர்வாகம் மற்றும் கடலோசை எப்எம் 90.4 உள்ளூர் சமூக ஆர்வலர்கள் இணைந்து பாம்பு பகுதி மக்களுக்கு பேரிடர் உதவிகள் தேவைப்படுவோருக்கு பிரத்தியேக எண்கள் வழங்கப்பட்டுள்ளது. உதவி வேண்டியவர்கள் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


