News April 15, 2024
பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் திறப்பு

தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 9, 2025
ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.
News December 9, 2025
ராமநாதபுரம்: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியற்றுடன் பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
கூடுதல் உரம் விற்றால் உரிமம் ரத்து; புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

யூரியாவுடன் கூடுதல் உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் – 9952842093, திருப்புல்லாணி/உச்சிப்புளி 7904026400,
திருவாடானை 9384152659, ஆர்.எஸ்.மங்கலம் 9524520909, பரமக்குடி 8072133657
நயினார் கோவில் 9443090564, போகலூர் 9345897745, கமுதி 7373173545
முதுகுளத்தூர் 9443642248, கடலாடி 6382740475 புகார் தெரிவிக்கலாம்.


