News October 25, 2024
பாம்பனில் நவ.20க்குள் புதிய ரெயில் பாலம் திறப்புவிழா

பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிய ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் அக்.30க்குள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் பாலத்தை ஆய்வு செய்து சான்று வழங்க உள்ளார். இதன் பின் நவ.20க்குள் புதிய பாலம் திறப்பு விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். பிரதமர் ஹெலிகாப்டரில் வந்திறங்க அரியாங்குண்டில் தனியார் பள்ளி மைதானத்தை தேர்வு செய்துள்ளனர்.
Similar News
News December 9, 2025
ராமநாதபுரத்தில் ஒரே நாளில் 491 பேர் கைது

ராமநாதபுரத்தில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று யூனியன் அலுவலகம் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர் .நீர்த்தேக்கத்தொட்டி சுத்தம் செய்வதற்கு கிளீனி ங் அலவனஸ் ரூ.300 வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய நிலையில் 191 பேரை போலீசார் கைது செய்தனர்.அதே போல் முதுகுளத்துாரில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்ட 300 பேரையும் கைது செய்தனர்.
News December 9, 2025
ராமநாதபுரம்: 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் கவனத்திற்கு

ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், முதுகுளத்தூர், கடலாடி, திருவாடனை ஆகிய வட்டங்களில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று (டிச.09, செவ்வாய்க்கிழமை) முதல் 18 வயது பூர்த்தியடைந்தவர்களின் வாக்காளர் சேர்க்கை விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஆதார் கார்டு, புகைப்படம், பிறப்புச் சான்றிதழ், பள்ளி TC ஆகியற்றுடன் பள்ளிகளில் உள்ள BLO அதிகாரிகளிடம் நேரில் சென்று விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News December 9, 2025
கூடுதல் உரம் விற்றால் உரிமம் ரத்து; புகார் தெரிவிக்க எண்கள் வெளியீடு

யூரியாவுடன் கூடுதல் உரங்கள் வாங்க கட்டாயப்படுத்தினால் உர விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்துறை எச்சரித்துள்ளது.
ராமநாதபுரம் – 9952842093, திருப்புல்லாணி/உச்சிப்புளி 7904026400,
திருவாடானை 9384152659, ஆர்.எஸ்.மங்கலம் 9524520909, பரமக்குடி 8072133657
நயினார் கோவில் 9443090564, போகலூர் 9345897745, கமுதி 7373173545
முதுகுளத்தூர் 9443642248, கடலாடி 6382740475 புகார் தெரிவிக்கலாம்.


