News December 31, 2024

பாபநாசம் அருகே விபத்து – இருவர் உயிரிழப்பு

image

பாபநாசத்தை சேர்ந்த சக்திவேல் – பிரபாகரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வடசருக்கை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தோடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

Similar News

News December 6, 2025

தஞ்சை விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

டிட்வா புயலால் சேதம் அடைந்த வயல்களில் விவசாயிகள் சாகுபடி செய்த பயிா்களைச் சுற்றி தேங்கியுள்ள அதிகப்படியான நீரை வடிகால் அமைத்து உடனடியாக வடித்து விட வேண்டும். மழைக்காலங்களில் உரமிடுதல், பூச்சி மருந்து தெளித்தல், களைக்கொல்லி இடுதல் போன்றவற்றைத் தவிா்க்க வேண்டும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்

News December 6, 2025

தஞ்சை: தீக்கிரையான 4 கடைகள்

image

அம்மாபேட்டை அருகே பூண்டி மெயின் ரோடு, கடைவீதியில் முகம்மது இஸ்மாயில் என்பவர் நடத்திவரும் பேன்ஸி ஸ்டோர் கடையில் இரவு மின் கசிவால் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகிலிருந்த விஜயகுமாரின் பஞ்சர் கடை, ரவியின் ஏஜென்சி மற்றும் சக்திவேலின் எர்த் மூவர்ஸ் உள்ளிட்ட கடைகளுக்கும் வேகமாக பரவியது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினரின் முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

News December 6, 2025

தஞ்சை: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091.
இதனை ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!