News December 31, 2024

பாபநாசம் அருகே விபத்து – இருவர் உயிரிழப்பு

image

பாபநாசத்தை சேர்ந்த சக்திவேல் – பிரபாகரன் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வடசருக்கை அருகே எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சாலையோரம் இருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தோடு நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் பலத்த காயம் ஏற்பட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கபிஸ்தலம் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். 

Similar News

News December 5, 2025

தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

image

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.

News December 5, 2025

தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

image

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒக்கநாடு கீழையூர், வீரராசம்பேட்டை மற்றும் முள்ளுக்குடி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை (டிச. 5) மாரியம்மன் கோயில், திருப்பிறம்பியம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பனி காரணமாக காலை காலை 9 – 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது

News December 5, 2025

தஞ்சை கலெக்டர் தகவல்!

image

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில், 2025-26 ஆம் ஆண்டு 1 லட்சத்து 97 ஆயிரத்து 100 ஏக்கரில் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜன் தெரிவித்துள்ளார். மேலும், தற்போது 3 லட்சத்து 26 ஆயிரத்து 95 ஏக்கர் பரப்பளவில் சம்பா தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!