News March 26, 2025

பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 22, 2025

சிவகங்கையில் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் தாக்குதல்

image

செம்பனூர் புனித அந்தோணியார் சர்ச் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவது தொடர்பாக ஊர் மக்கள் ஒன்றுகூடி இருந்த போது செம்பனூர் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம், என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த அருளானந்தை  பீர் பாட்டிலால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அருளானந்த் கல்லல் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

News December 22, 2025

சிவகங்கை: BOI வங்கியில் ரூ.1,20,940 சம்பளத்தில் வேலை ரெடி!

image

சிவகங்கை மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள 514 Credit Officers பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 25 – 40 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் ஜன 5க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு சம்பளம் ரூ.64,820 – ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த நல்ல வாய்ப்பை அனைவருக்கும் SHARE செய்யுங்க.

News December 22, 2025

சிவகங்கை: வேன், கார், பைக் அடுத்தடுத்து மோதி விபத்து

image

திருவாடனையை சேர்ந்த கரண் புளியடித்தம்பம் ஐயப்பன் கோவில் அருகே, மதுரையிலிருந்து தேவகோட்டை நோக்கி செல்லும் போது சமையல் ஆட்களை வேனில் ஏற்றி கொண்டு இருந்தபோது மணிமாறன் என்பவர் ஓட்டி வந்த கார் வேனின் மீது மோதியதாக கூறப்படுகிறது. வேனின் பின்னால் வந்த இருசக்கர வாகனமும் விபத்தில் சிக்கியது. இதில் ஒரு குழந்தை உட்பட 6 நபர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!