News March 26, 2025

பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

சிவகங்கையில் 123 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்!

image

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் காவல்துறையினர் சிறையில் அடைத்து வருகின்றனர். இந்த ஆண்டு (2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பெயரில் 123 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 30, 2025

சிவகங்கை: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

image

சிவகங்கை மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…

News December 30, 2025

சிவகங்கை: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை!

image

மேலூர் அருகே சேக்கிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை (26). இவர் கீழடி அருகே புலியூரில் உள்ள தனியார் பருப்பு கம்பெனியில் தங்கி பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இவர் தங்கியிருந்த அறையில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கீழடி போலீசார் வழக்கு பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!