News March 26, 2025

பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

image

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 14, 2025

சிவகங்கை: 1,387 வழக்குகள் முடிவுற்று ரூ.18.09 கோடிக்கு தீர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

News December 14, 2025

சிவகங்கை: 1,387 வழக்குகள் முடிவுற்று ரூ.18.09 கோடிக்கு தீர்வு

image

சிவகங்கை மாவட்டத்தில் 14 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. தேசிய மக்கள் நீதிமன்ற விசாரணைகள் மூலம் 1,387 வழக்குகள் முடிக்கப்பட்டு ரூ. 18.09 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.

News December 13, 2025

தொழில் முனைவோர் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சுற்றுலா தொழில் முனைவோர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் வழங்கும் பொருட்டு https://www.tntourismtors.com என்ற இணையதளத்தில் கட்டாயமாக பதிவு மேற்கொள்ள வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு காரைக்குடியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலர் அலுவலக 04565 232348 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!