News March 26, 2025
பாதுகாப்பு பணிக்கு முன்னாள் படைவீரர்கள் அழைப்பு

சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருக்கோவில்களுக்கான பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் இராணுவ வீரர்களுக்கு 77 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தற்போது 51 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே அரசால் அனுமதிக்கப்பட்ட திருக்கோவில் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பமுள்ளவர்கள் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 19, 2025
மானாமதுரை தெருக்களில் ஜாதி பெயா்களை அகற்றபடும்

மானாமதுரை நகராட்சியில் தெருக்களின் ஜாதி பெயா்களை அகற்றிவிட்டு, மாற்றுப் பெயா்கள் வைக்க கடந்த நகர் மன்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, மாற்றுப் பெயா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளன. தெருக்களின் ஜாதிப் பெயா்களை அகற்றும் முடிவுக்கு பொது மக்கள் வரவேற்புத் தெரிவித்துள்ளனர். என்று நகர் மன்ற தலைவர் மாரியப்பன் கென்னடி தெரிவித்துள்ளார்.
News September 19, 2025
சிவகங்கை: EXAM இல்லாத அரசு துறை வேலை! APPLY

மத்திய அரசின் கீழ் செயல்படும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் 160 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. B.E படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 4 வருட ஒப்பந்த வேலையாகும். மாத சம்பளம் – ரூ.25,000 முதல் ரூ.31,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. அக். 22க்குள் <
News September 19, 2025
காரைக்குடி:GH-ல் சிகிச்சைக்கு பணமா.?

காரைக்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவிற்கு உலோக பிளேட் வைக்க ரூ.5 ஆயிரம் பணம் கேட்பதாக நோயாளி ஒருவர் கூறியதால் சர்ச்சை எழுந்துள்ளது . தலைமை மருத்துவர் அருள்தாஸ் கூறுகையில்: சிகிச்சைக்கு வந்தவர்களிடம் காப்பீட்டு அட்டை இருந்தால் பணம் தேவைப்படாது. காப்பீட்டு அட்டை இல்லையென்றால் பணம் செலவாகும் என்று தான் தெரிவித்துள்ளனர். டாக்டர்கள் யாரும் பணம் வாங்கவில்லை என்றார்.