News February 15, 2025

பாதாள சாக்கடையில் அடைப்பு, பொதுமக்கள் அவதி

image

காஞ்சிபுரம் பெருமாள் தெரு வழியாக மீன் மார்க்கெட் சாலையில் வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இச்சாலையில், மீன் மார்க்கெட் எதிரில், பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ‛மேன்ஹோல்’ வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதற்கு தீர்வு காண வலியுறுத்தப்படுகிறது

Similar News

News July 8, 2025

உள்ளூரில் வங்கி அதிகாரி வேலை

image

பேங்க் ஆப் பரோடா வங்கியில் ‘லோக்கல் பேங்க் ஆபிசர்’ எனப்படும் உள்ளூர் வங்கி அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 2,500 பணியிடங்கள் நிரப்படுகின்றன. தமிழகத்தில் மட்டும் 60 பணியிடங்கள் உள்ளன. ரூ.48,480 – 85,920 வரை . சம்பளம் வழங்கப்படும். தமிழ் தெரிந்திருக்க வேண்டும். டிகிரி இருந்தால் போதும் ஜூலை 24ஆம் தேதிக்குள் <>இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

News July 8, 2025

செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுப்பு

image

வல்லக்கோட்டை முருகன் கோயில் குடமுழுக்கு விழாவிற்கு, காங்., கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக பேசிய செல்வப்பெருந்தகை, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக்கூடாது என்பதற்காக மக்களோடு மக்களாக சாமி தரிசனம் செய்தேன்” எனத் தெரிவித்தார்.

News July 7, 2025

காஞ்சிபுரம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று (07.07.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!