News April 14, 2024
பாட்டிலில் பெட்ரோல் வழங்க தடை

நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூரில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாதுகாப்பு கருதி தேர்தல் முடியும் வரை பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கடலூர் பெட்ரோல் பங்குகளில் போலீஸார் சார்பில் இதற்கான அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
Similar News
News November 28, 2025
கடலூர்: 12th / ITI படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு

கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ‘Cross Borders Inc’ நிறுவனத்தில், காலியாக உள்ள 10 TECHNICAL ENGINEER / INSTALLATION ENGINEER பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு குறைந்தது 12th / ITI / DIPLOMA முடித்த, 18-35 வயதுக்குட்பட்ட ஆண்கள் வரும் டிச.4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.10,000 வரை வழங்கப்படும். குறைந்தது 1 வருட வேலை அனுபவம் கொண்ட நபர்கள் <
News November 28, 2025
கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக் கடலில் நிலவும் ‘திட்வா’ புயல் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நாளை ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவ.29) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். SHARE NOW!
News November 28, 2025
கடலூர் மாவட்டத்தை புரட்டி போட போகும் புயல்..

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘திட்வா’ புயல் தொடர்ந்து வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கடலூர் மாவட்டத்தை ஒட்டிய கடற்பகுதியை கடந்து செல்லக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29) பலத்த சூறைக்காற்றுடன் கூடிய அதிகனமழை கொட்டித் தீர்க்க கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


