News November 25, 2024
பாடி அருகே மெத்தபெட்டமைன் விற்ற 2 பேர் கைது

பாடி மேம்பாலம் அருகே போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தத்தில் அவர்கள் மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பது தெரிந்தது. இதையடுத்து வெங்கடேஷ், கோவர்தனரெட்டி ஆகிய 2 பேரை கைது செய்து புழல் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 64 கிராம் போதைப்பொருள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News November 26, 2025
மதுரவாயல்: 15 வயது சிறுமி தற்கொலை!

திருவள்ளூர்: மதுரவாயலில் 15 வயது சிறுமி காதலனுடன் தலைமறைவாகிய நிலையில், காதலுக்கு உதவி செய்த 17 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது சிறுமி அவருடைய காதலனுடன் பேசுவதற்கு உதவி வந்த 17 வயது சிறுமி, அவர்கள் தப்பிச் சென்று பிடிபட்ட பயத்தில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
News November 26, 2025
திருவள்ளூர்: கொட்டிக் கிடக்கும் ரயில்வே வேலைகள்! APPLY

திருவள்ளூர் மாவட்ட மக்களே.., இந்திய ரயில்வே துறையில் உள்ள வேலைகள்:
1) தென்கிழக்கு ரயில்வே( 1785 காலியிடங்கள்)
2) ரயில்வேயில் 5810 ஸ்டேஷன் மாஸ்டர், டிக்கெட் சூப்பர்வைசர் வேலை( நாளை கடைசி)
3)RITES நிறுவனத்தில் 252 காலியிடங்கள்
இவைகளுக்கு விண்ணப்பிக்க <
News November 26, 2025
திருவள்ளூரில் மழை கொட்டப் போகுது!

திருவள்ளூர் மாவட்டத்தில் நவ. 29, 30 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தெற்கு அந்தமான் கடலில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


