News November 25, 2024

பாடி அருகே மெத்தபெட்டமைன் விற்ற 2 பேர் கைது

image

பாடி மேம்பாலம் அருகே போதைப்பொருள் விற்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று தனிப்படை போலீசார் சென்றனர். அங்கு சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை பிடித்து விசாரித்தத்தில் அவர்கள் மாணவர்களுக்கு மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பது தெரிந்தது. இதையடுத்து வெங்கடேஷ், கோவர்தனரெட்டி ஆகிய 2 பேரை கைது செய்து புழல் போலீசில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து 64 கிராம் போதைப்பொருள், ரூ.6 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

Similar News

News October 21, 2025

திருவள்ளூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News October 21, 2025

திருவள்ளூர்: வெடி விபத்தில் 4 பேர் பலி.. மேலும் ஒருவர் கைது

image

திருவள்ளூர் ஆவடி, பட்டாபிராமில் நாட்டு வெடி வெடித்து 4 பேர் பலியான சம்பவத்தில் மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் வைத்து நாட்டு வெடி விற்றபோது ஏற்பட்ட விபத்தில் வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் கைதான நிலையில், நாட்டு வெடி மொத்த வியாபாரி கோவிந்த ராஜை போலீசார் கைது செய்துள்ளனர். நாட்டு வெடி வியாபாரி விஜய் என்பவரை 2 தனிப்படைகள் அமைத்து தேடும் பணிகள் நடந்து வருகிறது.

News October 21, 2025

திருவள்ளூர்: வீடு கட்ட அரசு தரும் சூப்பர் ஆஃபர்

image

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். பிறரும் பயன்பெற SHARE பண்ணுங்க.

error: Content is protected !!