News March 21, 2025

 பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதை கண்டித்து காவல் நிலையம் முற்றுகை

image

பாஜகவை சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் சிவ கோகுல கிருஷ்ணனை நேற்று அடையாளம் தெரியாத ஐந்து பேர் சேர்ந்த கும்பல் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் படுகாயமடைந்த அவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாஜக வை சேர்ந்த பலர் மீஞ்சூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் அங்கு பதற்றம் நிலவியது.

Similar News

News March 25, 2025

பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

image

திருவள்ளூர், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவில் வசிப்பவர் முருகன் வயது 37 தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகாரின் பேரில் ஆர்கே பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து முருகனை கைது செய்தனர். இந்த வழக்கு திருவள்ளூர் POCSO நீதிமன்றத்தில் நீதிபதி சரஸ்வதி முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சரஸ்வதி தீர்ப்பளித்தார்.

News March 25, 2025

அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து

image

திருத்தணி, சென்னை-திருப்பதி நெடுஞ்சாலையில் உள்ள குன்னத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற அரசு பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். இதனால் பின்னால் வந்த பிரகாஸ் என்பவரின் கார் அரசு பேருந்து மீது மோதியது. இதில் காரின் முன் பகுதி சேதமான நிலையில் காரில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்த்தப்பினர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News March 25, 2025

ஆவடி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

ஆவடியில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!