News May 7, 2025
பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 14, 2025
ஓசூரில் குழந்தைகள் காப்பகம் முதல்வர் திறந்து வைத்தார்

தமிழக தொழில் துறை சார்பில் ஓசூரில் தொழில் பூங்கா வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட குழந்தைகள் காப்பகத்தை, தமிழக முதலவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (அக்.14) காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொழில் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு குழந்தைகளை பாதுகாப்பாக வைக்க இந்த காப்பகம் பெரும் உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
News October 14, 2025
கிருஷ்ணகிரி: தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் செயல்படும் தோட்டக்கலை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையத்தில் தோட்டக்கலை பட்டயப் படிப்புக்கு காலியாக உள்ள 11 இடங்களுக்கு அக். 15 மற்றும் 31-ஆம் தேதிகளில் நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதுகுறித்து அந்த மையத்தின் துணை இயக்குநர் து.மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.மேலும் விவரங்களுக்கு 73587 85872, 72007 83122 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்
News October 14, 2025
கிருஷ்ணகிரி: மருத்துவமனையில் சிகிச்சை சரியில்லையா?

கிருஷ்ணகிரி மக்களே, அரசு மருத்துவமனைகளை நம்பி தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை சரி இல்லை என்றாலோ, பணியாளர்கள் சரியாக நடந்துகொள்ளவில்லை என்றாலோ பொதுமக்கள் TOLL FREE 104 எண்ணில் அல்லது உங்க மாவட்ட சுகாதார அலுவலகத்தில் புகார் செய்யலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.