News May 7, 2025

பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

image

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 14, 2025

கிருஷ்ணகிரி: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

image

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே உள்ள காட்டுர் கிராமத்தைச் சேர்ந்த மீனா என்பவருக்கு இன்று காலை 1.28 மணி அளவில் பிரசவவலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனை செல்லும் வழியில் செவிலியர் சந்தோஷ் உதவியுடன் 108 ஆம்புலன்ஸில் அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர். அவர்கள் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 14, 2025

கிருஷ்ணகிரி: ஆன்லைனில் ஆர்டர் செய்பவரா நீங்கள்?

image

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க
✅ நம்பகமான தளங்களில் மட்டுமே பொருட்களை வாங்கவும்
✅ Cash on Deliveryயை தேர்வு செய்யலாம்
✅ Return Policy, Customer Reviews, Seller Ratings ஆகியவற்றை சரிபார்க்கவும்
✅ மோசடி ஏற்பட்டால் உடனே புகார் செய்யவும்,
நிறுவனத்திடமிருந்து பதில் கிடைக்கவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது <>சைபர் குற்றப்பிரிவு<<>> மூலம் சட்ட நடவடிக்கை எடுக்கலாம். SHARE IT

News September 14, 2025

பாதுகாப்பு வளையத்திற்குள் கிருஷ்ணகிரி!

image

கிருஷ்ணகிரி அரசு விழாவில் கலந்துகொள்ளவுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பாதுகாப்புக்காக, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த 1,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் தலைமையில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை இந்த பணிகளை மேற்பார்வையிடுகிறார்.

error: Content is protected !!