News May 7, 2025

பஸ் இருசக்கர வாகனம் மோதல் வாலிபர் உயிரிழப்பு

image

மேல்சோமார்பேட்டையை சோ்ந்தவர் சஞ்சய் (17). இவா் மோட்டாா் சைக்கிளில் கிருஷ்ணகிரி – ஒசூா் தேசிய நெடுஞ்சாலையின் அணுகு சாலையில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சஞ்சயை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பினா். ஆனால் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 4, 2025

கிருஷ்ணகிரியில் தந்தை பெரியார் விருது அறிவிப்பு!

image

கிருஷ்ணகிரியில், தந்தை பெரியார் விருது 2025ற்கான அறிவிப்பு இன்று (டிச.04) வெளியிடப்பட்டுள்ளது. சமூக நீதிக்காக செயற்பட்டு வரும் நபர்களை கௌரவிக்கும் இந்த விருதுக்கு ரூ.5,00,000 பணத்தொகையும், தங்கப்பதக்கமும் வழங்கப்படும். இதற்கு பொதுநல பணிகள் & சமத்துவக் கொள்கைகள் முன்னெடுத்த நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேவைப்படும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை ஆட்சியர் அலுவலகத்தில் வரும் டிச.18குள் சமர்ப்பிக்கலாம்.

News December 4, 2025

கிருஷ்ணகிரி: குடும்ப தகராறில் பெண் தற்கொலை!

image

கிருஷ்ணகிரி, கெலமங்கலம் அருகே வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார்.இவரது மனைவி காயத்ரி(25). திருமணமாகி 5 ஆண்டுகள் ஆனா நிலையில், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுமாம். யோதனால் விரக்தியடைந்த காயத்ரி, 6 மாதங்களுக்கு முன் தன் தாய் வீட்டிற்கு சென்றார். பின் அவர், நேற்று முன்தினம் வீட்டிலுள்ள 8 அடி தண்ணீர் தொட்டியில் குதித்து, தற்கொலை செய்து கொண்டார். இதனை, அப்பகுதி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 4, 2025

கிருஷ்ணகிரி: புறம்போக்கு நிலத்திற்கு பட்டா பெறுவது எப்படி?

image

ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் இலவச பட்டா பெறலாம். இந்த தகுதிகள் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!