News August 8, 2024

பவானி நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்களுக்கு அழைப்பு

image

பவானி அடுத்த கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், ஆகஸ்டு 10 (சனிக்கிழமை), பழநி – தண்டாயுபாணி (முருகன்) கோவில் நிர்வாகம் சார்பில் நாட்டு சர்க்கரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. எனவே அன்று காலை 11 மணிக்கு சுற்றுவட்டார பகுதி நாட்டுச்சர்க்கரை உற்பத்தியாளர்கள், நாட்டு சர்க்கரை தரம் பிரித்து கொண்டு வந்து விற்று பயனடையலாம் என ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் (99445-23556) தெரிவித்துள்ளார்.

Similar News

News November 28, 2025

ஈரோடு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை

image

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் காலியாக உள்ள 309 உதவி மேலாளர் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த, 18 வயது முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு அகவிலைப்படி நல்ல சம்பளம் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். கடைசி தேதி டிச.01 ஆகும். யாருக்காவது உதவும் அதிகம் ஷேர் பண்ணுங்க!

News November 28, 2025

ஈரோட்டில் கொடூர கொலை சம்பவம்!

image

ஈரோடு சூளை எல்விஆர் காலனியை சேர்ந்தவர் கமலம் 60. இவருடைய மகன் புதுச்சேரியில் வேலை செய்வதால் கமலம் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று காலை அவரது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கமலம் பிணமாக கிடந்தார். மேலும் ஈரோடு வடக்கு போலீசார் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள் கமலத்தை கொன்று 5 பவுன் நகையை கொள்ளை அடித்தது தெரியவந்தது. குற்றவாளிகளை கண்டுபிடிக்க டிஸ்பி தலைமையில் 5 தனிப்படை அமைப்பு.

News November 28, 2025

கோபியில் களம் இறங்கும் ஈபிஎஸ்!

image

கோபிசெட்டிபாளையம் MLAவாக இருந்த செங்கோட்டையன் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருந்த சூழலில், அவர் தனது MLA பதவியை ராஜினாமா செய்து, பின்னர் நேற்று விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் தனது ஆதரவாளர்களுடன் இணைத்துள்ளார். இந்நிலையில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி கோபிசெட்டிபாளையத்தில் வரும் 30ம் தேதி பொதுக்கூட்டம் நடத்துகிறார். இதனால் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!