News January 22, 2025
பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.
Similar News
News December 1, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

ஈரோடு மக்களே இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது பெண்கள் அணியும் ஆடைகளில் கவனமுடன் இருக்க வேண்டும், ஆடையின் ஏதேனும் சிறு பகுதி கூட வாகனத்தின் சக்கரத்தில் மாட்டிக்கொண்டால் விபத்து ஏற்படக்கூடும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாகப் பயணிக்க வேண்டும் என்று ஈரோடு மாவட்டக் காவல்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
News December 1, 2025
ஈரோடு: ரேஷன் கார்டில் பிரச்சனையா..இத பண்ணுங்க!

ஈரோடு மக்களே, உங்கள் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், நீக்கம், சேர்ப்பு, பிழை திருத்தம் போன்ற பிரச்சனைகளுக்கும், ரேஷன் பொருட்களின் தரம், புகார், சேவைகளில் மாற்றம் குறித்த புகார்களை தெரிவிப்பதற்கும், தகவல்கள் அப்டேட் ஆகாதது போன்ற எந்தவொரு ரேஷன் கார்டு சம்பந்தமான சேவைக்கும், நீங்கள் 04428592828 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 1, 2025
ஈரோடு: கரண்ட் பில் எப்படி தெரிந்து கொள்வது?

ஈரோடு மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <


