News January 22, 2025

பவானி: சிங்கம்பேட்டையில் பிடிபட்ட மலைப்பாம்பு

image

பவானி, சிங்கம்பேட்டை கேட், காட்டூா் அருகே, காவிரிக் கரையோரப் பகுதியில், மலைப்பாம்பு மெதுவாக ஊர்ந்து சென்றுள்ளது. இதைக் கண்ட அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், மலைப்பாம்பை லாவகமாக பிடித்ததோடு, சென்னம்பட்டி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினா் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை, கூண்டில் அடைத்துச் சென்று, சென்னம்பட்டி வனப் பகுதியில் பாதுகாப்பாக விடுவித்தனா்.

Similar News

News November 6, 2025

ஈரோடு: இரண்டாம் நிலை காவலர் எழுத்து தேர்வு

image

இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வரும் 9 இல் திண்டல் வெள்ளாளர் கல்லூரியில் நடைபெறுகிறது. இதன் விண்ணப்பதாரர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை மற்றும் பிளாக் பால்பாயிண்ட் பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும், கண்டிப்பாக ஆதார் அட்டை ஓட்டுனர் உரிமம் வாக்காளர் அடையாள அட்டை பான் கார்டு போன்ற ஏதேனும் ஒன்றை அசலாக கொண்டு வர வேண்டும் 9.30 பிறகு தேர்வு எழுத அனுமதி இல்லை. தேர்வாணையர் சுஜாதா தகவல்.

News November 6, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக ஆறுகள், ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பியுள்ளது. இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களின் குழந்தைகள் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் குளிக்கச் செல்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

News November 6, 2025

ஈரோடு: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்

image

ஈரோடு மக்களே, வீடுகள் வணிக வளாகங்கள் (ம) அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987-94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் தங்களிடம் லைன்மேன் வந்து சேவையை சரிசெய்வார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!