News April 16, 2025
பவானியில் பாலியல் தொழில் !

பவானி கூடுதுறை ரோட்டில் தனியார் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக வந்தத் தகவலின் பேரில் பவானி டி.எஸ்.பி ரத்தினகுமார் தலைமையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான வகையில் தங்கி இருந்த ஐந்து நபர்கள் மற்றும் ஐந்து பெண்களை விசாரித்தனர். விசாரணையில் அங்கு பாலியல் தொழில் நடந்து வந்தது உறுதியானது. இதனைத்தொடர்ந்து விடுதியின் மேலாளர் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.
Similar News
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
சத்தியமங்கலம்: விஷம் அருந்தி வாலிபர் தற்கொலை

சத்தியமங்கலம் செண்பகநாயக்கர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (35). இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். தங்கராஜ் சரியாக வேலைக்கு செல்லாமல் மது அருந்தி வந்தார். தனது மனைவியிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுத்ததால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 18, 2025
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை!

ஆன்லைன் ஷாப்பிங்கின் போது உங்கள் பணப்பையைப் பாதுகாப்பாக வைத்திருக்க, பாதுகாப்பான, நம்பகமான தளங்களில் ஷாப்பிங் செய்யுங்கள், பொது வைஃபை இணைப்புகளைத் தவிர்க்கவும், மற்றும் சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது விளம்பரங்களைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்தனர். மேலும் சைபர் க்ரைம் இலவச தொலைபேசி எண். 1930 தொடர்பு கொள்ளவும்.


