News August 15, 2024

பவானிசாகர் அணை திறப்பு

image

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வழங்கக்கூடிய பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து விட்டார். இதில் ஈரோடு தொகுதி எம்.பி பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்களும் விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர். 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவு. 

Similar News

News December 2, 2025

ஈரோட்டில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லுாரியில் அரசு சார்பில், வரும், 6ம் தேதி காலை, 8 முதல் 4 மணி வரை, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றனர். கூடுதல் விபரத்துக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அல்லது 86754-12356 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஈரோடு மக்களே யாருக்காவது நிச்சயம் உதவும் கண்டிப்பாக அதிகம் SHARE பண்ணுங்க!

News December 2, 2025

ஈரோடு: மின் இணைப்பு இருக்கா? முக்கிய தகவல்

image

ஈரோடு ஈ. வி. என் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் கோட்ட அலுவலகத்தில் நாளை டிச.3 காலை 11 மணிக்கு மின் பயனீட்டாளர்கள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அது சமயம் ஈரோடு நகர், கருங்கல்பாளையம், சூரம்பட்டி, வீரப்பன்சத்திரம், சம்பத் நகர், திண்டல், மேட்டுக்கடை, சித்தோடு ஆகிய பகுதிகளில் உள்ள மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என தகவல்.

News December 2, 2025

ஈரோட்டில் காதல் செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

image

ஆன்லைன், டேட்டிங் ஆப்ஸ் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகம் இல்லாதவர் காதல் செய்வதாக தொடர்பவர்களை நம்ப வேண்டாம் . இதில் மோசடி போன்ற அபாயங்கள் உள்ளன. உங்கள் உணர்வுகளை தவறாகப் பயன்படுத்தப்பட்டு பண மோசடிகளுக்கும் வழி வகுக்கலாம் என ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பதிவு செய்தனர். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!