News August 15, 2024

பவானிசாகர் அணை திறப்பு

image

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வழங்கக்கூடிய பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து விட்டார். இதில் ஈரோடு தொகுதி எம்.பி பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்களும் விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர். 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவு. 

Similar News

News November 16, 2025

ஈரோடு: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு எச்சரிக்கை!

image

தமிழ்நாட்டில் தொழிலாளர் துறை குழந்தை தொழிலாளர்களுக்கு எதிராக நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. குழந்தை தொழிலாளர்களை ஒழிப்பது மற்றும் மீட்பு செய்து அவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது முக்கிய முன்னுரிமையாக உள்ளது.
குழந்தைகள் பணம் சம்பாதிக்காமல், பள்ளிக்கு சென்று அறிவை சம்பாதிக்கட்டும் என மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தியது.

News November 16, 2025

பள்ளி வாகனத்தில் சிறார் நூல் தொகுப்பு

image

பழங்குடியினர் நலத்துறை மூலம் பள்ளி குழந்தைகளை அவர்களது இல்லங்களிலிருந்தே அழைத்து வர கடந்த மாதத்தில் பள்ளி வாகனங்கள் வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 4 வாகனங்களில் ஆசனூர் பள்ளிக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் பயண நேரத்தில் வாகனத்தில் நூலை படிக்கவும், வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கவும் இந்த வாகனத்தில் சிறார் நூலை ஈரோடு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

News November 16, 2025

ஈரோடு: VOTER ID இல்லையா? இனி கவலை வேண்டாம்!

image

ஈரோடு மக்களே வாக்களிப்பது ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. 18 வயது நிறைந்தவர்கள் இப்போது https://voters.eci.gov.in அல்லது <>Voter Helpline App<<>> வழியாக Form 6 பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். ஆதார், முகவரி, வயது சான்றுகள் அவசியம். சரிபார்ப்பு முடிந்ததும் அட்டை தபால் மூலம் அனுப்பப்படும். SHARE செய்து உங்க நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்க!

error: Content is protected !!