News August 15, 2024

பவானிசாகர் அணை திறப்பு

image

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரம் வழங்கக்கூடிய பவானிசாகர் அணை நிரம்பியுள்ளது. இந்நிலையில் இன்று விவசாயத்துக்காக கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அமைச்சர் முத்துசாமி தண்ணீரை திறந்து விட்டார். இதில் ஈரோடு தொகுதி எம்.பி பிரகாஷ் உட்பட முக்கிய பிரமுகர்களும் விவசாய சங்க பிரதிகளும் கலந்து கொண்டனர். 120 நாள் தண்ணீர் திறக்க உத்தரவு. 

Similar News

News November 15, 2025

ஈரோட்டில் வெடிக்க வைக்க முயன்ற 4 பேர் கைது!

image

ஏளுர் பகுதியைச சேர்ந்தவர் தங்கவேல். இவரது தோட்டத்தில் பாறைகளை வெடிவைத்து தகப்பதற்காக உரிமம் பெறாமல் ஜெலட்டின் குச்சிகள் 36 நான் டெட்டர்னேட்டர் 8 மற்றும் கம்ப்ரசர் வாகனம் ஒன்று ஆகியவற்றை கொண்டு தனது தோட்டத்தில் உள்ள பாறைகளை வெடிக்க வைக்க முயன்ற பொழுது உரிய அனுமதி இல்லாமல் அதை பயன்படுத்தியதால் அதை பங்களாப்புதூர் போலீசார் பறிமுதல் செய்து இது சம்பந்தமாக 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

News November 15, 2025

ஈரோடு மாவட்ட இரவு காவலர் ரோந்து பணி விவரம்!

image

ஈரோடு மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண்-100 க்கும், சைபர் கிரைம் எண்-1930 க்கும், குழந்தைகள் உதவி எண்-1098 எண்களும், போலீசாரின் கைப்பேசி எண்கள் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

News November 14, 2025

ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளிக்கு விருது!

image

2024-25 ஆம் ஆண்டிற்கான ஈரோடு மாவட்டத்தின் சிறந்த 3 தொடக்கப்பள்ளிகளில் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டை தொடக்கப்பள்ளியும் தேர்வாகி உள்ளது. அதற்கான விருது மற்றும் கேடயம் வழங்கும் விழா காரைக்குடியில் இன்று (நவ.14) நடந்தது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியையிடம் விருது மற்றும் கேடயங்களை வழங்கினார்.

error: Content is protected !!