News August 9, 2024
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2914 கனஅடியில் இருந்து 6532 கனஅடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 95.43 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீருக்காகவும் பாசனத்துக்காகவும் பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1005 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் 19 பவானிசாகர் அணை 70வது ஆண்டு நிறைவுசெய்கிறது.
Similar News
News November 20, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க.
News November 20, 2025
ஈரோடு : ரேஷன் கடையில் ரேகை விழவில்லையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர்.இந்த சிக்கலை தீர்க்க <
News November 20, 2025
ஈரோடு: செங்கோட்டையனுக்கு ஷாக் கொடுத்த நிர்வாகி!

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மொட்டணம் பகுதியைச் சேர்ந்த முன்னால் அமைச்சர் செங்கோட்டையனின் தீவிர ஆதரவாளரான திருமூர்த்தி அதிமுக நம்பியூர் மத்திய ஒன்றிய செயலாளர் மணிகண்ட மூர்த்தியை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து இணைத்துக்கொண்டார். இந்நிகழ்வில் பட்டணம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர்.


