News February 18, 2025
பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.
Similar News
News November 18, 2025
கோவையில் காலியான அலுவலகங்கள்!

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
கோவையில் காலியான அலுவலகங்கள்!

கோவை மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்கள் இன்று SIR வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை புறக்கணித்து ஒருநாள் வேலை நிறுத்தத்தில் இன்று ஈடுபட்டனர். குறுகிய காலத்தில் அதிக பணி சுமை காரணமாக போராட்டம் நடத்தப்படுவதால், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல அலுவலகங்கள் இன்று காலியாகக் காட்சி அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
News November 18, 2025
கோவையில் வசமாக சிக்கிய நேபாள சிறுவன்!

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள நெகமம் பொள்ளாச்சி – பல்லடம் சாலையில் பிரகாஷ் என்பவர் மரக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கடையை பூட்டிவிட்டு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு ரூ.25000 திருடு போனது தெரிய வந்தது. இப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 17 வயது நேபாள சிறுவனை கைது செய்தனர்.


