News February 18, 2025
பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.
Similar News
News December 21, 2025
வாக்காளர் சேர்ப்பில் எச்சரிக்கை அவசியம்: வானதி சீனிவாசன்

கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் இன்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிவடைந்த நிலையில், போலி வாக்காளர்கள் சேர்ப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மாநிலம் முழுவதும் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, புதிய சேர்க்கைகளில் தேர்தல் ஆணையம் கவனமாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.
News December 21, 2025
கஞ்சா சாக்லேட் விற்ற நபர் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் கஞ்சா சாக்லேட் விற்பனை நடைபெறுவதாக ஆர்.எஸ்.புரம் காவல்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் பெயரில் தகவல் கிடைத்த இடத்தில் போலீசார் நேற்று திடீர் ஆய்வு செய்துள்ளனர். அப்போது அங்கு கஞ்சா சாக்லேட் விற்பனை ஈடுபட்டுக் கொண்டிருந்த அர்ச்சன பிரியா (25) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 232 கிராம் கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனர்.


