News February 18, 2025
பழிவாங்கும் நடவடிக்கை: காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவை ஆர்எஸ்புரத்தில் பாஜக சார்பில் நடந்த புஷ்பாஞ்சலி கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பங்கேற்று பேசினார். இதுதொடர்பாக போலீஸார் அவர் மீது வழக்குப்பதிந்து விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். தொடர்ந்து இன்று அவர் ஆஜரான நிலையில் 1 மணி நேர விசாரணைக்கு பின் அனுப்பப்பட்டார். பின், பேசிய அவர் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறேன் என்றார்.
Similar News
News December 10, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்!

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை (டிச.11) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை கிருஷ்ணராஜபுரம், அத்திபாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், பிஎஸ்ஜி எஸ்டேட் (ம) மருத்துவமனை, பீளமேடுபுதூர், புலியகுளம், பங்கஜாமில், பாரதிபுரம், செளரிபாளையம், உடையாம்பாளையம், ராமநாதபுரம், திருச்சி ரோடு, எஸ்.எஸ்.குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், அக்ரகார சாமக்குளம், பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News December 10, 2025
கோவையில் சோகம்: ஒரு மாத பெண் குழந்தை பலி!

பல்லடம் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அணில். இவரது மனைவி பூஜா. தம்பதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் தான் ஸ்ரீனி என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி குழந்தைக்கு கடுமையான தலை மற்றும் கால் வலி இருந்துள்ளது. கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 10, 2025
கோவை கலெக்டர் பெயரில் போலி FACE BOOK

சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் முக்கிய நபர்களின் புகைப்படங்கள் பெயர் வைத்து போலி கணக்குகள் துவங்கி பணம் பெற்று மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோவை கலெக்டர் பவன்குமார் பெயரில் புகைப்படத்துடன் முகநூலில் போலி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இக்கணக்கிலிருந்து அவரது நண்பர்களுக்கு நட்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


