News August 24, 2024

பழனி முருகன் மாநாட்டை தொடங்கி வைத்த முதல்வர்

image

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனியில் இன்றும், நாளையும் அகில உலக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தவாறு காணொளி காட்சி வாயிலாக சற்றுமுன் தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில் அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி, சக்கரபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டை ஒட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News

News February 23, 2026

கொடைக்கானலில் பயங்கரம் – தனிப்படை அமைப்பு!

image

கொடைக்கானலில் திரைப்படத் துணை நடிகர் விஷ்ணு பிரியாவின் தந்தை சூரியநாராயணன், மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். விடுதி பணியாளர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, இந்தத் துணிகரச் செயலில் 5 பேர் ஈடுபட்டனர். மாவட்ட எஸ்.பி. பிரதீப் தலைமையில் 50 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளைப் பிடிக்கத் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாகக் காவல் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

News February 23, 2026

திண்டுக்கல்: உங்கள் வீட்டில் குழந்தை இருக்கா?

image

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் இன்று (23.02.2026) முதல் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 வயது வரையிலான குழந்தைகளின் கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக நடைபெறும் இம்முகாமை, மாவட்ட ஆட்சியர் சரவணன் ஏ.எம்.சி சாலை மையத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். இதனை ஷேர் பண்ணுங்க

News February 23, 2026

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல்: பகுதி நேர வேலைவாய்ப்பு, டேட்டா என்ட்ரி வேலைவாய்ப்பு என அலைபேசிக்கு வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் மற்றும் சமூக வலைதள இணைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் இதுபோன்ற மோசடிகளில் பணத்தை இழக்கக்கூடாது. சந்தேகமான தகவல்கள் குறித்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in இணையதளத்தில் புகார் செய்யலாம்

error: Content is protected !!