News January 23, 2025
பழனி முருகன் கோவில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 56 லட்சம் 36 ஆயிரத்து 788ரூபாய் கிடைத்துள்ளது. 609வெளிநாட்டு கரன்சிகள், 1591கிராம் தங்கம், 20320கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்துள்ளது.
Similar News
News November 24, 2025
திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில், சமூக வலைதளங்களில் தினசரி விழிப்புணர்வு புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இன்று (நவம்பர் 24) “கடவுச்சொல்லை (PASSWORD) அடிக்கடி மாற்றிக்கொள்ளுங்கள்” என்ற வாசம் கொண்ட விழிப்புணர்வு புகைப்படம், மாவட்ட காவல்துறையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
News November 24, 2025
திண்டுக்கல்: B.Sc, B.E, B.Tech, B.Com படித்தவரா நீங்கள்?

திண்டுக்கல் மக்களே, இந்திய விமானப்படையில் காலியாக உள்ள 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: B.Sc., B.E., B.Tech., B.Com., BBA.,
3. கடைசி தேதி : 14.12.2025, 4.
சம்பளம்: ரூ.56,100 – ரூ.1,77,500, 5.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 20-அதிகபட்சம் 26,
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க<
இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 24, 2025
திண்டுக்கல் அருகே நள்ளிரவில் பரபரப்பு!

திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தாடிக்கொம்பு அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு, கேரளாவில் இருந்து பெங்களூருக்கு சென்ற தனியார் ஆம்னி பேருந்து நள்ளிரவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனை உடைத்து சேற்றுப்பகுதியில் சென்று நின்றது. அதிர்ஷ்டவசமாக எதிர்புறமாக வாகனங்கள் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தற்போது கிரேன் மூலம் பேருந்தை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.


