News January 23, 2025

பழனி முருகன் கோவில் உண்டியலில் ரூ.3 கோடி காணிக்கை

image

பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல்களை திறந்து காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி, உண்டியல் காணிக்கையாக 3 கோடியே 56 லட்சம் 36 ஆயிரத்து 788ரூபாய் கிடைத்துள்ளது. 609வெளிநாட்டு கரன்சிகள், 1591கிராம் தங்கம், 20320கிராம் வெள்ளி ஆகியவையும் காணிக்கையாக கிடைத்துள்ளது.

Similar News

News November 27, 2025

திண்டுக்கல் அருகே பரபரப்பு.. சிக்கிய 2 பேர்!

image

மதுரை மண்டல மத்திய நுண்ணறிவு போலீசார் திண்டுக்கல், செம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக 3 பேர் சுற்றித்திரிந்த‌னர். போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞர்களை பிடித்து விசாரித்ததில் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. தொடர்ந்து கணேஷ், சந்தோஷ்குமார் இருவரிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, பழனி மதுவிலக்கு காவல்நிலையம் அழைத்துவந்து வழக்குப் பதிவு செய்தனர்.

News November 27, 2025

திண்டுக்கல்: டிகிரி இருந்தால் BOI வங்கியில் வேலை!

image

திண்டுக்கல் மக்களே, பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் (BOI), காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு https://bankofindia.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க நவம்பர் 30-ம் தேதி கடைசி ஆகும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News November 27, 2025

திண்டுக்கல்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திண்டுக்கல் மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை <>இந்த லிங்கில்<<>> மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைசென்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!