News April 19, 2025

பழனி: பெண் சிசுவை சாலையில் வீசி சென்ற மர்ம நபர்கள்

image

பழனி அருகே சண்முக நதி சாலை ஓரத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் குழந்தையின் அழுகுரல் கேட்டு வாகன ஓட்டி ஒருவர் சென்று பார்த்தபோது பையில் பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பெண் குழந்தையின் சிசுவை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News November 22, 2025

திண்டுக்கல் காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை இணையதளம் மூலம் (நவம்பர் 22), 2025 அன்று பொதுமக்களுக்கு சைபர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இதில் வங்கி கணக்கு விவரங்கள், OTP, கார்டு தகவல்களை தெரியாத நபர்களுடன் பகிர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. அவசர உதவிக்கு, சைபர் குற்ற எண் ‘1930’ அழைக்கலாம்.

News November 22, 2025

பழனி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அறிவிப்பு!

image

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை விறுவிறுப்பாக தொடங்கி உள்ளன. இந்நிலையில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில், பழனி சட்டமன்றத் தொகுதியில், நாம் தமிழர் கட்சியின் சார்பில் பழங்குடியினத்தை சேர்ந்த முருகேஸ்வரி போட்டியிட உள்ளதாக கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 22, 2025

திண்டுக்கல்லில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து!

image

திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு அருகே திண்டுக்கல் – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு குடகனாறு பாலம் அருகே கம்பத்திலிருந்து பெங்களூருக்கு அதிவேகமாக சென்ற ஆம்னி பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பெண்கள் உட்பட 15-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர் விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!