News April 15, 2024
பழனி கிரிவலப்பாதை: நீதிமன்றம் உத்தரவு

பழனி கோயில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்த்துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இன்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
Similar News
News November 28, 2025
திண்டுக்கல்: இனி அலைய தேவையில்லை!

திண்டுக்கல்லில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், www.tnpds.gov.in இணையதளம் மூலம் மின்னணு அட்டை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தில் தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை ஆன்லைனில் அப்லோடு செய்தால், 30-40 நாட்களுக்குள் விண்ணப்ப நிலை குறித்து அரசு தகவல் வழங்கும். இதன் மூலம் நேரமும் பணமும் மிச்சப்படுத்த முடியும். இதை அனைவருக்கும் SHAER பண்ணுங்க!
News November 28, 2025
திண்டுக்கல்லில் சம்பவ இடத்திலேயே பலி!

திண்டுக்கல் தாடிக்கொம்பு அடுத்த லட்சுமணன்பட்டி, பேட்டரி ஸ்கூல் அருகே திண்டுக்கல் – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தாடிக்கொம்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 28, 2025
திண்டுக்கல்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


