News January 24, 2025
பழனியில் ரூ.6 கோடியை தாண்டிய காணிக்கை

பழனி மலைக் கோயிலில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ரூபாய் 6,39,29,559, தங்கம் 1874 கிராம், வெள்ளி 27003 கிராம், வெளிநாட்டு கரன்சி 906 நோட்டுகள் கிடைத்துள்ளன. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Similar News
News November 19, 2025
திண்டுக்கல்: ஆண்கள் தினத்தை கொண்டாடிய காவலர்கள்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆண்கள் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், ஆண் அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்களுக்கு ஆண்கள் தின வாழ்த்துக்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஆண்கள் தினத்தை முன்னிட்டு ஆண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஆண் காவலர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
News November 19, 2025
திண்டுக்கல் காவல்துறையின் சார்பில் விழிப்புணர்வு

இன்று (நவம்பர் 19), திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சமூக வலைதளங்களில் குழந்தைகளுக்கு சாலை விதிகள் குறித்து கற்றுக் கொடுக்குமாறு அறிவுரை தரும் விழிப்புணர்வு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டது. இது குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு வழி வகுக்கும் என திண்டுக்கல் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2025
திண்டுக்கல்: இனி அலைய வேண்டாம்!

திண்டுக்கல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம், <


