News January 24, 2025

பழனியில் ரூ.6 கோடியை தாண்டிய காணிக்கை

image

பழனி மலைக் கோயிலில் நேற்று முன்தினமும், நேற்றும் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில், ரொக்கமாக ரூபாய் 6,39,29,559, தங்கம் 1874 கிராம், வெள்ளி 27003 கிராம், வெளிநாட்டு கரன்சி 906 நோட்டுகள் கிடைத்துள்ளன. இணை ஆணையர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் கோயில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள், கல்லூரி ஊழியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 5, 2025

திண்டுக்கல்: கேஸ் புக்கிங் செய்ய வந்தது மாற்றம்!

image

திண்டுக்கல் மக்களே, கேஸ் புக்கிங் -ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது. பாரத் கேஸ்: https://www.ebharatgas.com, இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in ஹெச்.பி: https://myhpgas.in கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News December 5, 2025

பழனி அருகே தூக்கிட்டு இளைஞர் தற்கொலை!

image

பழனி அருகே சின்ன கலயமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 20 வயது தரணீஸ்வரன் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறுகிறார். ஆனால் நோய் குணமடையாததால் மன அழுத்தம் அதிகரித்து, தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். நெய்காரப்பட்டி தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்து உடனடியாக சம்பவ இடத்தில் சென்று, அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 5, 2025

ஒட்டன்சத்திரம் அருகே உரம் தின்ற ஆடுகள் பலி!

image

ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மலையாளம், விக்னேஷ், முனியப்பன் ஆகியோர் நேற்று வழக்கம் போல் மேய்ச்சலுக்காக விட்டு வந்த ஆடுகளில், அப்பகுதியில் இருந்த உரம் கலந்த அரிசியை சாப்பிட்ட மூன்று ஆடுகள் மர்மமாக உயிரிழந்தன. தகவல் அறிந்த இடையக்கோட்டை கால்நடை மருத்துவ குழு சம்பவ இடத்திற்கு வந்து ஆடுகளை பரிசோதித்துப் புதைத்தனர். இறப்புக்கான காரணம் பின்னர் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!