News September 14, 2024
பழனியில் போலீசார் மீது தாக்குதல்: 8 பேர் கைது

பழனி ரயில்வே பீடர் சாலையில் உள்ள உணவகத்தில் போலீசை தாக்கியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான காவலர் துரைராஜ் சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசை தாக்கியதாக மாதேஷ், குணா, அரவிந்த், கட்டளை மாறி, பிரபு, பிச்சை மணி உள்ளிட்ட 8 பேரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 29, 2025
திண்டுக்கல் காவல்துறை சமூக வலைதள அறிவுரை!

திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் சமூக வலைதளங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவுறுத்தல் (அக்.29) வழங்கியுள்ளனர். வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துவது, மது அருந்தி வாகனம் ஓட்டுவது மற்றும் அதிவேகத்தில் செலுத்துவது போன்றவை விபத்துக்கு காரணமாகின்றன என்பதால், இத்தகைய செயல்களை தவிர்த்து பாதுகாப்பாக பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News October 29, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள் APPLY NOW!

திண்டுக்கல் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும்.விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் https://www.rrbchennai.gov.in/ என்ற
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர்!
News October 29, 2025
திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


