News August 19, 2024
பழனியில் கிணற்றில் விழுந்து சிறுவன் பலி

பழனி கீரனுார் அருகே உள்ள புங்கமுத்துரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் வேலுச்சாமி (10) நேற்று பழனி அ.கலையம்புத்தூர் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு வந்தார். மாலை அக்ரஹாரம் பகுதி அருகே உள்ள கிணற்றருகில் வேலுச்சாமி சென்றபோது எதிர்பாராத விதமாக அதில் தவறி விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து தீயணைப்பு துறை வீரர்கள் வந்து சிறுவனின் உடலை மீட்டனர். இதுகுறித்து பழனி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 19, 2025
திண்டுக்கல்: உங்களிடம் ரேஷன் அட்டை இருக்கா?

திண்டுக்கல் மக்களே! ரேஷன் கடை திறந்திருக்கிறதா என வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். (SHARE பண்ணுங்க)
News December 19, 2025
வத்தலகுண்டு: சிறுமிக்கு பாலியல் தொல்லை

வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 17வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக தாண்டிக்குடியைச் சேர்ந்த யாதவ்குமார் (19) மீது புகார் அளிக்கப்பட்டது. இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், யாதவ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News December 19, 2025
திண்டுக்கல்: ரூ.60,000 சம்பளத்தில் வங்கியில் வேலை!

திண்டுக்கல் மக்களே, பாங்க் ஆப் இந்தியா வங்கியில் 514 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: Any degree.
3. கடைசி தேதி : 05.01.2026
4. சம்பளம்: ரூ.64,820 முதல் 1,20,940 வரை.
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க <
6. விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.12.2025. இத்தகவலை SHARE பண்ணுங்க மக்களே!


