News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 13, 2025
திண்டுக்கல்: இனி வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம்!

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல் <
News September 13, 2025
திண்டுக்கல்: வாலிபர் போக்சோவில் கைது!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த அஜீத் ( 21) என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை ஆசைவார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் நிலக்கோட்டை போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் நிலக்கோட்டை போலீசார் அஜீத்தை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
News September 13, 2025
திண்டுக்கல்லில் செயின் பறிப்பால் பரபரப்பு!

திண்டுக்கல்: நிலக்கோட்டை அருகே உள்ள குளத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ஜெயந்தி(40). இவர், தனியார் டியூசன் சென்டர் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று(செப்.12) இரவு டியூசன் முடித்து இ.பி காலனி சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த போது பைக்கில் வந்த மர்ம நபர்கள் அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.