News April 21, 2025
பழனியில் கஞ்சா விற்பனை செய்த 6 வாலிபர்கள் கைது!

பழனி நகர் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் காவலர்கள் தீவிர ரோந்து & கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பின்புறம் கஞ்சா விற்பனை செய்த கார்த்திக்ராஜா(25), சிவக்குமார்(23), மாரிசாமி(21), அருண்குமார்(37), ஜேம்ஸ்(27), நாகேந்திரன்(27) ஆகிய 6 பேரை கைது செய்து அவர்கள் இடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 18, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
News November 18, 2025
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திண்டுக்கல், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (நவ.21) காலை 10.30க்கு கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும். இதில் பல துறை அலுவலர்கள் கலந்து கொண்டு அரசின் மானியத் திட்டங்கள், வேளாண் கருவிகள், ஒழுங்குமுறை விற்பனை, கால்நடை பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு, வங்கி மற்றும் கூட்டுறவு கடன் பற்றிய விளக்கங்களை வழங்குவார்கள். விவசாயிகள் கோரிக்கைகள் குறித்த மனு அளிக்கலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்தார்.
News November 18, 2025
ஒட்டன்சத்திரத்தில் வெடிகுண்டு வைத்த இருவர்!

ஒட்டன்சத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சத்திரப்பட்டி அருகே உள்ள வீரலப்பட்டி பகுதியில் வனத்துறையினர் இன்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நாட்டு வெடிகுண்டுகளை வைத்து இரண்டு காட்டுப் பன்றிகளை வேட்டையாடிய இருவரை வனத்துறையினர் பிடித்தனர்: பிடிபட்ட முத்து விஜயன் (வீரலப்பட்டி), செல்வராஜ் (அம்பிளிக்கை) இருவரிடமும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


