News November 24, 2024
பழனிக்கு ரூ.120 இல் ரயில் பயணம்

திண்டுக்கல் – கோவை சிறப்பு மெமு ரயில் மூலம் நெல்லைப் பயணிகள் ரூ.120 செலவில் பழனி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில்- கோவைக்கு பகலில் செல்லும் ரயிலில் நெல்லையிலிருந்து ஏறும் பயணிகள் மதியம் 1.20 மணிக்கு திண்டுக்கல்லில் இறங்கி அங்கிருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்படும் மெமோ ரயிலில் ஏறினால் 3 மணிக்கு பழனிக்கு செல்ல முடியும். இதற்கு நேரடி டிக்கெட் ரூ.120 மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 22, 2025
நெல்லை: கிணற்றுக்குள் விழுந்து மாணவர் பலி.!

தச்சநல்லூரைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (19) கல்லூரி 2ம் ஆண்டு படித்த நிலையில் நேற்று நண்பருடன் கரையிருப்பில் உள்ள கிணற்றுக்கு சென்றபோது நீச்சல் தெரியாத நிலையில் விக்னேஸ்வரன் கிணற்றில் விழுந்து விட்டதாக நண்பர்கள் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்புத் துறையினர் கிணற்றுக்குள் விக்னேஸ்வரனை மூன்று மணி நேரமாக தேடிய நிலையில் தற்போது சடலமாக மீட்கபட்டார்.
News November 22, 2025
ஊர்க்காவல் படைக்கு இன்று ஆட் தேர்வு; போலீஸ் அறிவிப்பு

நெல்லை மாநகர காவல் துறையில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு பாளை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நாளை காலை 7:00 மணி முதல் 10 மணி வரை நடைபெறுகிறது. இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பங்கேற்கலாம். 18 முதல் 50 வயதுக்குள் இருக்க வேண்டும். மாநகர எல்லையில் வசிக்க வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் போட்டா கல்வி சான்று போன்ற ஆவணங்களை கொண்டு வர வேண்டுமென மாநகர காவல் துறை அறிவித்துள்ளது.
News November 22, 2025
வீட்டுக்கு வந்தவர் 16 பவுன் நகையுடன் ஓட்டம்: கேரளாவில் சிக்கினார்

சுத்தமல்லியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மனைவி செல்வி இவரது வீட்டுக்கு உறவினரான கங்காதேவி என்பவர் தனது ஆண் நண்பர் ஐயப்பன் என்பவருடன் வந்துள்ளார். திடீரென இருவரும் அங்கிருந்து சென்று விட்டனர். அதே நேரத்தில் பீரோவில் இருந்த 16 பவுன் நகை திருடு போனது. இது குறித்து சுத்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி கேரளாவில் பதுங்கி இருந்த ஐயப்பனை கைது செய்து அவரிடமிருந்து தங்க நகையை மீட்டனர்.


