News December 6, 2024
பழங்குடியின மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ” “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், பழங்குடியினர் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு, மற்றும் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்கு 18 முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். கல்வி தகுதியாக குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 16, 2025
கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவையில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (நவ.17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, பட்டணம் , பட்டணம் புதூர் , சத்தியநாராயணபுரம் , பள்ளபாளையம் EB அலுவலகம் , கரவலி சாலை , நாகமாநாயக்கன் பாளையம், பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு, கொள்ளுபாளையம், ஷீபா நகர், தென்னம்பாளையம், சுப்ராம்பாளையம், காளியாபுரம், சங்கோதிபாளையம். ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.
News November 16, 2025
கோவையில் வசமாக சிக்கிய நபர்!

கோவை ஆர்.எஸ். புரம் பகுதியில், புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக, ஆர்.எஸ். புரம் காவல்துறையினருக்கு நேற்று முந்தினம் தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், போலீசார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குப் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த பாலச்சந்திரன் (57) என்பவரைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 500 கிராம் புகையிலைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.
News November 16, 2025
சிலம்பம் போட்டியில் வெள்ளி வென்ற கோவை மாணவி!

கோவை மாநகர் மாவட்ட திமுக அலுவலகத்தில், இன்று (நவ.15) மாநில அளவிலான சிலம்பம் போட்டியில், 2- ஆம் இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்ற +1 மாணவி ரித்திகாவை, மாநகர் மாவட்ட திமுக பொறுப்பாளர் துரை. செந்தமிழ் செல்வன் நேரில் வாழ்த்தி பாராட்டு தெரிவித்தார். இந்நிகழ்வில், மாணவியின் தந்தை ராமன், சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் பிரின்ஸ், தொண்டர் அணி பகுதி துணை அமைப்பாளர் முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.


