News October 25, 2024

பள்ளி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

image

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த தனுஸ்ரீ (14), பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News November 25, 2025

திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி வாக்காளர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் (76) திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலூர் நகராட்சி திருக்கோவிலூர் வடக்கு பகுதி தெற்கு தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணிகள் நடைபெற்றது. இந்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று (நவ.25) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் திருக்கோவிலூர் சார் ஆட்சியர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News November 25, 2025

விழுப்புரம்: உங்களுக்கு ஓட்டு இருக்கா? CHECK பண்ணுங்க

image

விழுப்புரம் மக்களே, வாக்காளர் பட்டியலில் உங்க பெயர் இருக்கிறதா என உடனே செக் பண்ணுங்க. 1.புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
2.பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx மற்றும் https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
3.வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. எல்லோருக்கும் SHARE பண்ணுங்க

News November 25, 2025

விழுப்புரம்: மகனே தாய்க்கு எமனாகிய கொடூரம்!

image

விழுப்புரம்: கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் பிரகாஷ். நேற்று (நவ.25) முன் தினம் இவர் தனது தந்தையிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதை தட்டி கேட்ட தாய் விஜயலட்சுமியை கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த தாய் முண்டியம்பாக்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், பலனளிக்காமல் உயிரிழந்தார். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!