News October 25, 2024

பள்ளி மாணவி தற்கொலை: போலீஸ் விசாரணை

image

விழுப்புரம் மாவட்டம் ஜி.ஆர்.பி தெருவைச் சேர்ந்த தனுஸ்ரீ (14), பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றுள்ளார். அவரை மீட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கிருந்து முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News December 4, 2025

எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இன்று (டிச.04) கையொப்பமிட்டு துவக்கி வைத்தார். உடன் உதவி ஆட்சியர் மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.

News December 4, 2025

விழுப்புரம் மக்களே நீண்ட ஆயுள் பெற இந்த கோவிலுக்கு போங்க!

image

விக்கிரவாண்டி அகஸ்தீஸ்வரர் கோயில் தொன்மையான பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தத கோவில் ஆகும். இந்த கோவிலில் மூலவர் அகஸ்தீஸ்வரர், தாயார் தர்மசவர்த்தினி அருள்கின்றனர். இங்கு வந்து பிரதோஷ காலத்தில் சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், நீண்ட ஆயுள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அத்துடன், திருமணத் தடை நீங்கவும், கல்வியில் சிறக்கவும் பக்தர்கள் இங்கு வழிபடுகிறார்கள்.

News December 4, 2025

மாரத்தான்: பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்

image

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அலகு சார்பில், உலக எய்ட்ஸ் தினம் 2025 முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் பற்றிய மாவட்ட அளவிலான மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கோப்பைகளை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினார்.

error: Content is protected !!